.

Pages

Saturday, April 11, 2020

முஸ்லீம் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுத்த தனியார் மருத்துவமனை மீது TNTJ மாவட்டத்தலைவர் புகார்!

கே.ராஜிக் முகமது 
பட்டுக்கோட்டை, ஏப்.11
முஸ்லீம் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுத்த பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனை மீது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை கே.ராஜிக் முகமது மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பது;
நேற்று (ஏப்.10) வெள்ளிக்கிழமை முத்துப்பேட்டை ரியாஸ் என்பவர் தனது கர்ப்பிணி மனைவியின் பிரசவத்திற்கு பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது முஸ்லீம்களுக்கு பிரசவம் பார்க்க முடியாது எனக் கூறி வேறு எங்காவது சென்று பார்த்துக்கொள்ளும்படி சொல்ல, மிகவும் மன வேதனையுடன் அருகில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தனை மாதங்கள் பார்த்து வந்த மருத்துவர் இப்படி நடந்துகொண்டதால் மிகவும் மனஉளைச்சல் அடைந்துள்ளார். இஸ்லாமியர்களை மனரீதியாக புண்படுத்தும் வகையில் மருத்துவமனை நிர்வாகம் நடத்துகொண்டது. இதனால், பிற சமூக மக்களின் பார்வை, முஸ்லீம்கள் மீது பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த மருத்துவமனை மீது தக்க நடவடிக்கை எடுக்கமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. சிறப்பான முயற்ச்சி வாழ்த்துக்கள். இந்த புகார் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து கண்கானிக்கவும்

    ReplyDelete
  2. Well try and I hope the respected collector will take action on this humanless hospital.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.