.

Pages

Sunday, April 26, 2020

அதிராம்பட்டினத்தில் ஊரடங்கில் பால் விற்று ஏழைகளுக்கு உதவும் இளைஞர்கள்!

அதிராம்பட்டினம், ஏப்.26
ஊரடங்கு உத்தரவை அடுத்து, சைக்கிள் வண்டிகள் மூலம் விநியோகித்து வந்த பால் கடந்த ஏப்.7 ந்தேதி முதல் நிறுத்தப்பட்டதால், அதிராம்பட்டினம் பகுதியில் பால் தட்டுப்பாடு நிலவியது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில், பால் தட்டுப்பாட்டை போக்கும் விதத்தில், அதிராம்பட்டினம் கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்கத்தின் ஏற்பாட்டின் பேரில், அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் யாசின் அரபாத், நூருல் அமீன், முகமது அஸ்லம் ஆகியோர் அதிராம்பட்டினம் அருகில் உள்ள மழவேனிற்காடு, மண்ணாங்காடு ஆகிய கிராமங்களில் பால் விற்பனை நிலையத்தில் இருந்து பால் மொத்தமாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு தினமும் காலை, மாலை ஆகிய இரு நேரங்களில் விநியோகித்து வருகின்றனர்.

கடந்த ஏப்.9 ந் தேதி முதல் விற்பனை செய்த பாலில் கிடைத்த சொற்ப லாபத்தில், அதிராம்பட்டினத்தில், வருமானத்திற்கு வழி இல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கும் 20 ஏழை குடும்பங்களுக்கு, தலா 2 கிலோ வீதம் அரிசி, 7 முட்டை, 5 கிலோ காய்கறிகள் ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினர். பால் விற்று ஏழைகளுக்கு உதவும் இளைஞர்களின் பணி, அப்பகுதி வாசிகளிடையே பலத்த வரவேற்பைப் பெற்று உள்ளது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.