.

Pages

Thursday, April 16, 2020

அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி கிளையின் முக்கிய அறிவிப்பு!

அதிராம்பட்டினம், ஏப்.16
அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி கிளை வாடிக்கையாளர்கள் அவசரத் தேவைகளுக்கு துவரங்குறிச்சி, பட்டுக்கோட்டை ஆகிய கிளைகளில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என கிளை மேலாளர் டி.ராஜசேகர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (ஏப்.16) அவர் நம்மிடம் கூறியது;
'கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வங்கி கிளை அமைந்திருக்கும் பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளதால், அதிராம்பட்டினம் பேரூராட்சி அறிவுறுத்தலின் பேரில், வங்கி கிளையின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், வங்கியின் மண்டல அலுவலகத்தின் அனுமதியுடன், அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு (SAVINGS ACCOUNT) மற்றும் நடப்புக் கணக்கு (CURRENT ACCOUNT) வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களது அவசரத் தேவைகளுக்கு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கவும், பணம் டெப்பாசிட் செய்துகொள்ளவும் அதிராம்பட்டினம் அருகில் உள்ள துவரங்குறிச்சி மற்றும் பட்டுக்கோட்டை வங்கி கிளைகளை பயன்படுத்தலாம் என்றும், இந்த வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கும் என்றும், விரைவில் மறு உத்தரவு வந்ததும் வங்கி வழமைபோல் தொடர்ந்து செயல்படும்' என்றார். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.