.

Pages

Thursday, April 23, 2020

அதிராம்பட்டினத்தில் டேங்கர் லாரி மூலம் கிருமி நாசினி தெளிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.23
அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக டேங்கர் லாரி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மு.மாஹின் அபூபக்கர் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அதிராம்பட்டினம் பகுதிகளில் டேங்கர் லாரி மூலம் கிருமி நாசினி கரைசல் கலந்த மருந்தினை தூய்மைப் பணியாளா்கள் தெளித்தனர். இப்பணிகளை பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மு.மாஹின் அபூபக்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், அதிராம்பட்டினம் பகுதிகளில் நடக்கும் கை தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளித்தல், பிளிச்சிங் பவுடர் இடுதல் ஆகிய பணிகளை முகாமிட்டு ஆய்வு செய்ய உள்ளதாகவும், அடுத்து 3 நாட்களுக்கு அனைத்து தெருக்களிலும் டேங்கர் லாரி மூலம் கிருமி நாசினி தெளிக்க இருப்பதாகவும் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மு.மாஹின் அபூபக்கர் தெரிவித்தார். அப்போது, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி. பழனிவேலு துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.