.

Pages

Thursday, April 16, 2020

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் சப்-கலெக்டருடன் சந்திப்பு!

அதிராம்பட்டினம், ஏப்.16
அதிராம்பட்டினம் பகுதிக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் தடையின்றி முழுமையாக கிடைக்கவும், அதிராம்பட்டினம் பகுதி தென்னை விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு சென்று அன்றாட விவசாயப்பணிகளை தொடர அனுமதிக்கவும், இஸ்லாமியர்கள் 'கரோனா வைரசை' பரப்புகிறார்கள் என அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு சார்பில், அவ்வைமைப்பின் துணைத்தலைவர் பி.எம்.கே தாஜுதீன், செயலாளர் எம்.நெய்னா முகமது, ஆலோசகர் எம்.நிஜாமுதீன் ஆகியோர் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஏ.ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அவர்களை இன்று (ஏப்.16) வியாழக்கிழமை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பது;
1. அதிராம்பட்டினம் சுற்றுப்புற கிராமங்களின் இணைப்பு சாலைகளில் ஆங்காங்கே தடுப்பு வைத்து அடைத்திருப்பதால், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சாகுப்படி செய்திருக்கும் தென்னை விவசாயப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிராம்பட்டினம் பகுதி விவசாயிகள் தங்களது சொந்த நிலங்களுக்கு சென்று அன்றாட விவசாயப்பணிகளைத் தொடர்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து கிராம மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் அன்றாடப் பணிகளைத் தொடர்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சுற்றுப்புறத்தில் உள்ள மாளியக்காடு, ராஜாமடம் ஈசிஆர், மழவேனிற்காடு, வள்ளிக்கொல்லைகாடு ஈசிஆர் ஆகிய 4 பிரதான சாலைகள் வழியாக வரும் வாகனங்களை போலீசார் தணிக்கை செய்வதால், அதிராம்பட்டினம் பகுதிக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் முழுமையாக கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, எங்கள் பகுதி பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் முழுமையாக கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

3. இஸ்லாமியர்கள் 'கரோனா வைரசை' பரப்புகிறார்கள் என்று அதிராம்பட்டினம் சுற்றுப்புற கிராமங்களில் அவதூறு பரப்பப்படுவதால், அதிராம்பட்டினம் பகுதி இஸ்லாமியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இஸ்லாமியர்களுக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்டு சார் ஆட்சியர் ஏ.ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.