.

Pages

Thursday, April 9, 2020

கரையூர்தெரு கிராமத்தில் மஞ்சள்,வேப்பிலை கலந்த நீர் தெளிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.09
கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிராம்பட்டினம் கரையூர்தெரு கிராமத்தில் மஞ்சள், வேப்பிலை கலந்த நீர் இன்று வியாழக்கிழமை காலை தெளிக்கப்பட்டது.

அதிராம்பட்டினம் கரையூர்தெரு கிராம பஞ்சயாத் சார்பில், மாரியம்மன் கோவிலில் நடந்த வழிபாட்டில், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு கலந்துகொண்டு, கோவில் வாளகத்தில் மஞ்சள், வேப்பிலை கலந்த நீரை தெளித்து தொடங்கி வைத்தார். பின்னர், கரையூர்தெரு கிராம நிர்வாக இளைஞர்கள் 10 பேருக்கு கரோனா தன்னர்வலர்களுக்கான அடையாள அட்டை வழங்கினார்.

இதையடுத்து, 3 டேங்கர் வண்டிகளில் நிரப்பப்பட்ட மஞ்சள், வேப்பிலை கலந்து நீரை கரையூர்தெரு கிராமம் முழுவதும் தன்னார்வல இளைஞர்கள் தெளித்தனர். ஏற்பாட்டினை, கரையூர்தெரு கிராம நிர்வாகத் தலைவர் மற்றும் பஞ்சாயத்தார்கள் செய்திருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.