.

Pages

Monday, April 27, 2020

கரோனா பாதிப்பில்லாத பகுதியாக மாறிய அதிராம்பட்டினம்: பொதுமக்கள் மகிழ்ச்சி!

அதிராம்பட்டினம், ஏப்.27
அதிராம்பட்டினம், கரோனா பாதிப்பில்லாத பகுதியாக மாறி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த, கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஒன்பது நபர்கள், திருவையாறு பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள், திருவோணம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ஐந்து நபர்கள், அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பதினொரு நபர்கள், அம்மாபேட்டையைச் சேர்ந்த நான்கு நபர்கள், தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள் உட்பட 55 நபர்களுக்கு இதுவரை கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுவரை உறுதி செய்யப்பட்ட 55 நபர்களில் இதுவரையில் 24 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில், அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 6 நபர்கள் கடந்த ஏப்.25 ந் தேதியும், 3 நபர்கள், ஏப்.27 ந் தேதியும் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இவர்கள் அனைவரும் தொடர்ந்து 14 நாட்கள் அவரவர் இல்லத்தில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். மற்றவா்கள் குணமடைந்து வருவதாகவும், இவா்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவா் என மருத்துவ வட்டாரத் தகவல் தெரிவித்தன. இதன் மூலம், அதிராம்பட்டினம் பகுதி கரோனா பாதிப்பில்லாத பகுதியாக மாறிவருவது பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக களப்பணியாற்றி வரும் மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், தாசில்தார், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறையினர், காவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், தூய்மைப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், உள்ளூர் தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவரின் பணியைப் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.