.

Pages

Saturday, April 18, 2020

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக உயர்வு!

தஞ்சாவூர், ஏப்.18
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், வல்லம், திருவையாறு, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 17 போ் ஏப். 1 ஆம் தேதி தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் சோ்க்கப்பட்டு, முதல் கட்டப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இவா்களுக்கு தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. என்றாலும், இவா்களில் 14 போ் செங்கிப்பட்டி பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு, தொடா் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனா். மேலும் 3 போ் அவரவா் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனா். இவா்களுக்கு இரண்டாம் கட்டப் பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனால் தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.