.

Pages

Wednesday, April 8, 2020

அதிராம்பட்டினத்தில் அத்திவாசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க உதவி: எஸ்டிபிஐ கட்சி மாவட்டத் தலைவர் தகவல்!

என்.முகமது புகாரி
அதிராம்பட்டினம், ஏப்.08
அதிராம்பட்டினம் பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிவரும் வாகனங்கள் தடையின்றி கொண்டு வருவதற்கு தேவையான உதவிகள் செய்யத் தயார் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.முகமது புகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (ஏப்.08) அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது;
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசின் முழு ஊரடங்கு உத்தரவை அடுத்து, அதிராம்பட்டினம் முழுவதும் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டின் உள்ளது.

இந்த சமயத்தில் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வரும் வாகனங்களை அனுமதிப்பது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மூலம் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் அவர்களை தொடர்பு கொண்டு அனுமதி வாங்கி கொடுக்கப்பட்டு வருகிறது.

இது சம்பந்தமாக உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளை எந்த நேரத்திலும் அணுகலாம்.

மேலும், நேற்று செவ்வாய்க்கிழமை முதல் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்து வந்தவர்கள் பால் விநியோகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்கள். இதனை அடுத்து அதிரை ஜமாத்தார்கள் தங்களது பகுதிகளில் பால் விநியோகிக்க ஏற்பாடு செய்துவருவது வரவேற்புக்குரியது.

பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க எஸ்டிபிஐ கட்சியின் செயல்வீரர்கள் துணை நிற்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.