![]() |
வெறிச்சோடிக் காணப்படும் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் |
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (26.04.2020) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும், தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:-
உலகளாவிய நோய்த்தொற்றாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு பச்சை, நீலம் மற்றும் ரோஸ் வண்ணங்களில் அனுமதி அடையாள அட்டைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வர முடியும். மூன்று வண்ண அடையாள அட்டைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்த முடியாது.
எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (26.04.2020) முழு ஊரடங்காக கடைப்பிடிக்கப்படும் எனவும், தவிர்க்கமுடியாத காரணங்களைத் தவிர தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (26.04.2020) எந்த அடையாள அட்டைக்கும் அனுமதி கிடையாது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆக தஞ்சாவூர் மாவட்டத்தில் கடைபிடிக்கப்படும். குடிநீர், பால் மற்றும் மருத்துவத் தேவைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறை தடை காலம் முடியும் வரை நடைமுறையில் இருக்கும். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு கொரோனா தொற்று சமூக பரவலாக ஆவதை தடுத்திட இந்த நடைமுறையை பின்பற்றி ஒரு சில அசௌகரியங்கள் இருக்கும்பட்சத்திலும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், கொரோனா நோய் முன்னெச்சரிக்கை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 9345336838 (வாட்ஸ்அப்), 04362 - 271695, 1077 (கட்டுப்பாட்டு அறை) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.