.

Pages

Thursday, April 23, 2020

மழவேனிற்காடு சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.23
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, அதிராம்பட்டினம் அருகில் உள்ள மாளியக்காடு, ராஜாமடம், மழவேனிற்காடு, வள்ளிக்கொல்லைகாடு ஆகிய 4 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனத் தணிக்கை நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அதிராம்பட்டினம் - மதுக்கூர் சாலையில் உள்ள மழவேனிற்காடு சோதனைச் சாவடியில், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் 5 க்கும் மேற்பட்ட போலீசார் இரவு, பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மழவேனிற்காடு ஊராட்சி சார்பில், சோதனைச்சாவடி வழியாக அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு  ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எஸ் ராமச்சந்திரன் தானே முன்னின்று கை தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளித்து வருகிறார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.