.

Pages

Wednesday, April 15, 2020

அதிராம்பட்டினத்தில் காரணமின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிந்த நபர்களின் வாகனங்கள் பறிமுதல் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.15
அதிராம்பட்டினத்தில் ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாமல், காரணமின்றி வெளியே சுற்றித்திரியும் நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை, பழஞ்செட்டித்தெரு, கிழக்கு கடற்கரைச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஏப்.15) புதன்கிழமை மாலை போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, காரணமின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், கரோனா வைரஸ் தொற்று நோயால் சமூகத்திற்கு ஏற்படும் கடும் பாதிப்புகள் குறித்தும், அரசு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டுமென எச்சரித்தனர்.

இதில், அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயமோகன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் ராஜீவ், ஜார்ஜ், பழனிவேலு உள்ளிட்ட போலீசார் பணியில் ஈடுபட்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.