முஸ்லீம் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுப்பு தெரிவித்தது தொடர்பாக பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனை நிர்வாகம் வருத்தம் தெரிவித்தது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை கே.ராஜிக் முகமது தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை கே.ராஜிக் முகமது கூறியது;
'முத்துப்பேட்டை ரியாஸ் என்பவரின் கர்ப்பிணி மனைவிக்கு பிரசவம் பார்க்க மறுத்தது தொடர்பாக எனது கவனத்துக்கு வந்ததும், சம்பந்தப்பட்ட பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனை மீது கடந்த (11-04-2020) அன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்து இருந்தேன்.
இதுகுறித்து, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஏ.ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், பட்டுக்கோட்டை டிஎஸ்பி சுப்பிரமணியன் ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர். இதில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், அதிகளவில் இஸ்லாமியப் பெண்களுக்கு மகப்பேறு மருத்துவ சிகிச்சை இரவு, பகல் பாராமல் அளித்து வருவதாகவும், இஸ்லாமியர்கள் மத்தியில் தாங்கள் நன்மதிப்பை பெற்றுள்ளதாகவும். தாங்கள் அவ்வாறு என்றும் நினைத்தது இல்லை என்றும், இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும், இனி இதுபோன்று தவறு நடக்காது எனவும் குறிப்பிட்டனர்' என்றார்.
தனியார் மருத்துவமனையின் பெயரை குறிப்பிட உங்களுக்கு தைரியம் இல்லை. தயவுசெய்து இது போன்ற செய்திகளை பதிவு போடாதீர்... நீங்களெல்லாம் சமூக அறக்காவலர்கள்????? ஆரஞ்சு மிட்டாய் காரனுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லை
ReplyDelete