.

Pages

Sunday, April 12, 2020

முஸ்லீம் கர்ப்பிணிக்கு பிரசவம் மறுப்பு: தனியார் மருத்துவமனை நிர்வாகம் வருத்தம் தெரிவிப்பு!

பட்டுக்கோட்டை, ஏப்.12
முஸ்லீம் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுப்பு தெரிவித்தது தொடர்பாக பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனை நிர்வாகம் வருத்தம் தெரிவித்தது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை கே.ராஜிக் முகமது தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை கே.ராஜிக் முகமது கூறியது;
'முத்துப்பேட்டை ரியாஸ் என்பவரின் கர்ப்பிணி மனைவிக்கு பிரசவம் பார்க்க மறுத்தது தொடர்பாக எனது கவனத்துக்கு வந்ததும், சம்பந்தப்பட்ட பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனை மீது கடந்த (11-04-2020) அன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்து இருந்தேன்.

இதுகுறித்து, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஏ.ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், பட்டுக்கோட்டை டிஎஸ்பி சுப்பிரமணியன் ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர். இதில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், அதிகளவில் இஸ்லாமியப் பெண்களுக்கு மகப்பேறு மருத்துவ சிகிச்சை இரவு, பகல் பாராமல் அளித்து வருவதாகவும், இஸ்லாமியர்கள் மத்தியில் தாங்கள் நன்மதிப்பை பெற்றுள்ளதாகவும். தாங்கள் அவ்வாறு என்றும் நினைத்தது இல்லை என்றும், இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும், இனி இதுபோன்று தவறு நடக்காது எனவும் குறிப்பிட்டனர்' என்றார்.

1 comment:

  1. தனியார் மருத்துவமனையின் பெயரை குறிப்பிட உங்களுக்கு தைரியம் இல்லை. தயவுசெய்து இது போன்ற செய்திகளை பதிவு போடாதீர்... நீங்களெல்லாம் சமூக அறக்காவலர்கள்????? ஆரஞ்சு மிட்டாய் காரனுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.