.

Pages

Friday, June 6, 2014

பட்டுக்கோட்டை பகுதிக்கு ஜூன் 21 முதல் தமுமுகவின் புதிய ஆம்புலன்ஸ் சேவை !

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் செயல்படுத்தி வரும் பல்வேறு சமூக சேவைகளில் ஆம்புலன்ஸ் சேவையும் ஒன்று. அனைத்து சமூதாய மக்களின் பாராட்டுதலையும் - வரவேற்பையும் பெற்று வரும் இந்த சேவையை பல்வேறு ஊர்களுக்கு விரிவு படுத்தப்பட்டும் வருகின்றது. இதற்காக தயாள மனம் படைத்த பலர் நிதிஉதவி செய்தும் வருகின்றனர்.

அந்த வகையில் அதிரை அருகே உள்ள பட்டுக்கோட்டை பகுதிக்கு புதிதாக ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கி கிளையினரிடம் ஒப்படைப்பது என தமுமுகவின் முடிவையடுத்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாகன டீலரிடம் முன்பதிவு செய்யப்பட்டது. ரூபாய் 8 லட்சம் மதிப்புள்ள இந்த வாகனத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதன் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

தமுமுக நிர்வாகிகளிடம் ஆம்புலன்ஸ் வாகனம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து  எதிர்வரும் 21-6-2014 முதல் ஆம்புலன்ஸ் சேவையை துவக்குவது என முடிவு செய்துள்ளனர். இதற்கான அர்பணிப்பு விழா 21-6-2014 அன்று நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
     

5 comments:

  1. உங்கள் சேவைக்கு நன்றி. இதை விட முக்கியம் ஒன்று இருக்கு, அதிரையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு பெண்களுக்கென்றே பெண் ஓட்டுனர் பெண் நடத்துனர் இவர்களை வைத்து பேருந்துகளை இயக்கினால் என்ன.

    உண்மையில் உங்களை இந்த வையகம் பாராட்டி மகிழும்.

    ReplyDelete
  2. தமுமுக வின் மக்கள் பணி மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தமுமுக வின் மக்கள் பணி மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நல்ல முயற்சி ,மேலும் இது போல் த.மு.மு.க முயற்ச்சிகளை தொடர அல்லாஹ் துணைப்புரிவானாக ஆமீன்.வளர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  5. .
    உங்கள் சேவைக்கு நன்றி, .

    உண்மையில் உங்களை இந்த வையகம் பாராட்டி மகிழும்.

    Reply

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.