.

Pages

Sunday, December 21, 2014

ரூபாய் தாள் மாற்ற அவகாசம்: ஜனவரி 1ம் தேதியுடன் முடிகிறது !

2005ம் ஆண்டுக்கு முன் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் தந்து மாற்றிக் கொள்வதற்காக தரப்பட்ட அவகாசம் வரும் ஜனவரி 1ம் தேதியுடன் முடிகிறது. கறுப்புப் பணப் புழக்கத்தை தடுக்கும் வகையில் ரூபாய் தாள்களில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் கடந்த 2005ம் ஆண்டில் சேர்க்கப்பட்டன. எனவே, பாதுகாப்பு குறைந்த 2005க்கு முந்தைய ரூபாய் தாள்களை திரும்பப் பெற எண்ணிய ரிசர்வ் வங்கி, இது குறித்த அறிவிப்பை கடந்த ஜனவரி 22ம் தேதி வெளியிட்டது.

அதன்படி ஏப்ரல் 1-ம் தேதிக்குள் 2005-ம் ஆண்டுக்கு முந்தைய 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் தாள்களை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள அவகாசம் தரப்பட்டது. அதன் பின்னர் அந்த அவகாசம் ஜனவரி 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 2005-ம் ஆண்டுக்கு பின் அச்சடிக்கப்பட்ட ரூபாய் தாள்களில் அச்சிடப்பட்ட ஆண்டு பின்புறம் இடம் பெற்றிருக்கும். இதற்கு முன் அச்சான தாள்களில் அச்சிடப்பட்ட ஆண்டு இருக்காது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.