.

Pages

Tuesday, December 30, 2014

கல்லூரிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவது அவசியம்: மாவட்ட ஆட்சியர் அறிவுரை !

கல்லூரிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் அவசியம் பொருத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகளில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடையே ஒற்றுமை வளர்க்கவும், மோதல்களை தவிர்க்கவும், ஒவ்வொரு கல்லூரியிலும் மாதம் ஒரு முறை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கல்லூரி முதல்வர்கள், காவல் துறை அலுவலர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஆகியோர் கொண்ட குழு அமைத்து இது போன்ற சிரமங்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை ஆலோசிக்க வேண்டும்.

வருகைப் பதிவேட்டை நாள்தோறும் சரிபார்த்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும். பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்தல், ராக்கிங் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்லூரி வளாகங்கள் பெரிய அளவில் உள்ளதால் முழுவதும் கண்காணிப்பது சிரமம். எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து தனியார் அரசுக் கல்லூரிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும். அதேபோல ஒவ்வொரு கல்லூரியிலும் கல்லூரி முதல்வர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் வெளியாட்கள் தங்குகிறார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இதற்கென விடுதி கண்காணிப்புக் குழுவையும் அமைக்க வேண்டும். மாணவர்களுடன் கல்லூரி ஆசிரியர்கள் அடிக்கடி கலந்துரையாடி அவர்களுடைய குறைகளைப் போக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ. சந்திரசேகரன், மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் கே. கலா, முதன்மைக் கல்வி அலுவலர் வே. தமிழரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.