.

Pages

Monday, December 29, 2014

அதிரையில் புதியதோர் உதயம் 'பிளாட்டினம் டிரேடர்ஸ்' !

அதிரையை சேர்ந்தவர் N.M. சேக்தாவூத். இவர் பழைய போஸ்ட் ஆபீஸ் செல்லும் சாலையில் ( முட்டை கபீர் காக்கா கடை அருகில் ) அமைந்துள்ள இடத்தில் புதிதாக  'பிளாட்டினம் டிரேடர்ஸ்' என்ற பெயரில் தொழில் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். திறப்பு நாளன்று ஏராளமானோர் நிறுவனத்திற்கு வருகை தந்தனர். வந்திருந்த அனைவரையும் நிறுவன உரிமையாளர் N. M சேக்தாவூத் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் 'N.M. சேக்தாவூத்' நம்மிடம் கூறுகையில்...
'புதிதாக துவங்கியுள்ள எங்கள் நிறுவனத்தில் புதிதாக வீடு கட்ட தேவைப்படும் ஹார்டு வேர்ஸ், எலெக்ட்ரிக்கல்ஸ், பிளம்பிங் சாமான்கள், மர சாமான்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்கிறோம். தரமான நிறுவனங்களின் நேரடி கொள்முதல் செய்து குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாகவும் சில்லரையாகவும் வழங்க இருக்கிறோம். மேலும் செங்கலுக்கு மாற்றாக உலகத்தரத்தில் உறுதியான ரினாகான் சிமென்ட் கல்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்கிறோம்.
அதிரை வாழ் பொதுமக்கள் எங்களின் புதிய நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

தொடர்புக்கு : 9952628482

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

2 comments:

  1. வல்ல இறைவன் இத்தொழிலில் பரக்கத்தை கொடுப்பானாகவும், மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வல்ல இறைவன் வியாபாரத்தில் பரக்கத்தையும் ரஹ்மத்தையும் பொழிவானாகவும்... ஆமீன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.