.

Pages

Wednesday, December 24, 2014

அதிரையில் விற்பனைக்கு வந்த மீனின் சினையில் பொறிக்கப்பட்ட அரபி எழுத்தால் பரபரப்பு !

அதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் அஜ்மல் கான். இவரது மகன் அன்வர்தீன் ( வயது 28 ). இவர் கட்டட பொறியாளராக பணியாற்றி வருகிறார். இன்று காலை சமைப்பதற்காக மீன் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த பண்ணா மீனை வாங்கி வந்து வீட்டில் வைத்து அறுத்துள்ளார். அப்போது மீனின் வயிற்றில் இருந்த சினையை பார்த்தபோது இவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இதில் அரபி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளதை கண்டு வியந்துள்ளார். செய்தி குறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் மீனின் சினையை ஆச்சரியத்துடன் பார்வையிட்டு சென்றனர். இதனால் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து 'பொறியாளர்' அன்வர்தீன் நம்மிடம் கூறுகையில்...
'மீனின் சினையில் அரபி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளதை கண்டு வியந்த நான் உடனே உள்ளூர் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடம் மீனின் சினையை எடுத்துச் சென்று காட்டினேன். இவை அரபி எழுத்துதான் என்றும், 'அல்லாஹ்' என்ற வாசகம் இதில் உள்ளதாக கூறினார்கள்' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.