.

Pages

Saturday, December 20, 2014

பலத்த மழையால் ஆள் இல்லாத வீடு இடிந்து விழுந்தது !

முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று பகுதி கிராமங்களில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் மழை பெய்ந்துக்கொண்டே இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மழையின் காரணமாக முத்துப்பேட்டை மரைக்காயர் தெருவை சேர்ந்த மாஜிதாபேகம் என்பவரது ஓட்டு வீட்டின் சுவர்கள் மழை தண்ணீர் ஊறி சரிந்து விழுந்ததில் வீடு முழுவதும் இடிந்து விழுந்து சேதமாகியது. வீட்டில் இருந்தவர்கள் உறவினர் வீட்டுக்கு சென்றதால் இதில் அனைவரும் உயிர் தப்பினர். இதேபோல் அதேபகுதியில் குடியிருக்கும் அயூப்கான் என்பவரது வீட்டு காம்பவுண்ட் சுவரும், அதேபோல் தெற்கு தெரு, சின்னக்கட்சி மரைக்காயர் தெரு, மருந்தாங்கவெளி பகுதிகளிலும் வீட்டு பின்புறம் பகுதி சுவர்கள் இடிந்து விழுந்து சேதமாகியது. இதுக்குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி மற்றும் படம்:
நிருபர் மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.