ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்து, தெற்கெல்லைப் போராட்டம், திருத்தணி மீட்புப் போராட்டத்தில் தளபதியாக விளங்கியவர். திமுக தலைவர் கருணாநிதியின் திரையுலக நுழைவுக்கு காரணமாக இருந்தவர்.
கா.மு.ஷெரீப்பின் நூற்றாண்டையொட்டி, (26-12-2014) வெள்ளி மாலை, சென்னை ராணி சீதை மன்றத்தில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. கவிக்கோ அப்துல் ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன், காவ்யா சண்முக சுந்தரம், வீரபாண்டியன், எம்.ஏ.முஸ்தபா, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் உரையாற்றினர்.
விழாவில், கா.மு.ஷெரீப் எழுதிய நூல்கள், நூற்றாண்டு மலர், கா.மு.ஷெரீப் திரை இசை முத்துக்கள் ஆடியோ குறுந்தகடு ஆகியன வெளியிடப்பட்டன. பி.எச்.அப்துல் ஹமீத் தொகுப்புரையில், பழம்பெரும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி, முகேஷ், குமரி அபூபக்கர் ஆகியோரின் இசைநிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை முஸ்தபா தமிழ் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
படங்கள்: ஆளூர் ஷாநவாஸ்
பழையபாடல்கள் என்றைக்கும் சிந்தனை தரக்கூடியதும் அதற்க்கு எப்போதும் மதிப்பும் உள்ளது என்பதை நிரூபிக்கும் வண்ணமாக "பணம் பந்திலே..... குணம் குப்பையிலே " ; அன்னையே போல் ஒரு தெய்வம் இல்லை ... என்று எழுதிய கவி.கா.மு.ஷெரீப் அவர்கள் எழுதியதை சொல்லலாம்.
ReplyDeleteஆனால் இப்போ வர்ற கவிதை எல்லாம்
உன் காதல் சொல்லத்தேவை இல்லை
என் காதல் சொல்ல நேரமில்லை ......அடடா என்ன கண்டுபிடிப்பு!