முத்துப்பேட்டை கடற்கரை பகுதியாகும். இங்குள்ள அலையாத்தி காடுகள் ஆசிய கண்டத்திலே மிகப்பெரிய காடுகள் ஆகும்.இப்பகுதியில் கடலோர பாதுகாப்பு படை மற்றும் விமானப்படையினர் எப்போதும் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் முத்துப்பேட்டை அருகே உள்ள செம்படவன்காடு அங்காளம்மன் கோவில் அருகே முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான தென்னை மரத்தில் மோதி ரிமோட் விமானம் கீழே விழுந்தது. அதில் சிறிய ரக கேமிரா, கம்ப்யூட்டர்கள் பொருத்தப்பட்டு இருந்தது. கேமிராவில் சிங்கப்பூரில் உள்ள பல இடங்களின் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு உருவானது.
இதுகுறித்து முருகானந்தம் முத்துப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். டி.எஸ்.பி. கணபதி மற்றும் திருவாரூர் புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விமானத்தை கைப்பற்றினார்கள்.
பின்னர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அந்த விமானம் ஒரு விளையாட்டு பொருள் என்பது தெரியவந்தது. இந்த விமானம் முத்துப்பேட்டை–பட்டுக்கோட்டை சாலையில் வசிக்கும் தமீம் என்பவருக்கு சொந்தமானது ஆகும்.
அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் சிங்கப்பூரில் தொழில் செய்து வருவதும் அங்கிருந்து தனது குழந்தைகளுக்கு ரிமோட் விமானத்தை வாங்கி வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. தமீம் தனது வீட்டு மாடியில் இருந்து விமானத்தை பறக்க விட்ட போது அது ரிமோட்டின் கட்டுப்பாட்டை இழந்து செம்படவன் காட்டில் தென்னை மரத்தில் விழுந்துள்ளது.
இந்த ரிமோட் விமானத்தை வாங்கியதற்கான ரசீதை தமீம் போலீசாரிடம் காண்பித்தார். இதைதொடர்ந்து அவரிடம் விமானம் ஒப்படைக்கப்பட்டது.
அவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால் ரிமோட் விமானத்தில் வைக்கப்பட்டிருந்த கேமிராவில் அங்குள்ள காட்சிகளை பதிவு செய்து வைத்திருந்ததாக தெரிகிறது.
நன்றி: மாலை மலர்
இந்நிலையில் முத்துப்பேட்டை அருகே உள்ள செம்படவன்காடு அங்காளம்மன் கோவில் அருகே முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான தென்னை மரத்தில் மோதி ரிமோட் விமானம் கீழே விழுந்தது. அதில் சிறிய ரக கேமிரா, கம்ப்யூட்டர்கள் பொருத்தப்பட்டு இருந்தது. கேமிராவில் சிங்கப்பூரில் உள்ள பல இடங்களின் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு உருவானது.
இதுகுறித்து முருகானந்தம் முத்துப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். டி.எஸ்.பி. கணபதி மற்றும் திருவாரூர் புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விமானத்தை கைப்பற்றினார்கள்.
பின்னர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அந்த விமானம் ஒரு விளையாட்டு பொருள் என்பது தெரியவந்தது. இந்த விமானம் முத்துப்பேட்டை–பட்டுக்கோட்டை சாலையில் வசிக்கும் தமீம் என்பவருக்கு சொந்தமானது ஆகும்.
அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் சிங்கப்பூரில் தொழில் செய்து வருவதும் அங்கிருந்து தனது குழந்தைகளுக்கு ரிமோட் விமானத்தை வாங்கி வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. தமீம் தனது வீட்டு மாடியில் இருந்து விமானத்தை பறக்க விட்ட போது அது ரிமோட்டின் கட்டுப்பாட்டை இழந்து செம்படவன் காட்டில் தென்னை மரத்தில் விழுந்துள்ளது.
இந்த ரிமோட் விமானத்தை வாங்கியதற்கான ரசீதை தமீம் போலீசாரிடம் காண்பித்தார். இதைதொடர்ந்து அவரிடம் விமானம் ஒப்படைக்கப்பட்டது.
அவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால் ரிமோட் விமானத்தில் வைக்கப்பட்டிருந்த கேமிராவில் அங்குள்ள காட்சிகளை பதிவு செய்து வைத்திருந்ததாக தெரிகிறது.
நன்றி: மாலை மலர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.