.

Pages

Wednesday, December 24, 2014

படகில் இருந்து கடலில் தவறி விழுந்து அதிரை மீனவர் பரிதாப பலி!

அதிரை காந்தி நகர் துறைமுகத்திலிருந்து காளிதாஸ் ( வயது 42 ) காளிக்குமரன் ( வயது 20 ), காமராஜ் ( வயது 22 ) வீராமாக்காளி ( வயது 50 ) ஆகியோர் நள்ளிரவில் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

கடலின் உள்பகுதியில் வலைகளை வீசி மீன் பிடித்து விட்டு கரை திரும்பும் போது, கடலில் பலமாக வீசிய காற்றாலும், அலைகளின் சீற்றத்தால் படகு நிலை தடுமாறியது. படகின் ஆட்டத்துக்கு ஏற்ப நிற்க முடியாமல் தள்ளாடிய மீனவர் காளிதாஸ் கடலுக்குள் தவறி விழுந்தார். சற்றும் தாமதிக்காமல் உடனிருந்த மீனவர்கள் கடலுக்குள் பாய்ந்து அவரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது மீனவர் காளிதாஸ் பரிதாபமாக இறந்து விடுகிறார்.

இதுகுறித்து அதிரை கடலோர பாதுகாப்பு காவல் நிலையத்தில் இறந்தவரின் மகன் காளிக்குமரன் புகார் கொடுத்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்த், உதவி ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 comment:

  1. ஒருநாள் போவான் ஒருநாள் வருவான் ஒவ்வொருநாளும் துயரம் ...முடிந்தால் முடியும் தொடர்ந்தாள் தொடரும் ...இதுதான் எங்கள் வாழ்க்கை ...

    மறைந்த சகோதரர் ..காளிதாஸ் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாவங்கள் ...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.