பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட போது இருந்ததை விட தற்போது பல மடங்கு மக்கள் தொகை பெருகி உள்ளது. நகர எல்லைகளும் விரிவடைந்து சுற்று வட்டாரப்பகுதிகளிலும் குடியிருப்புகள் பெருகி வருகிறது. குறிப்பாக பிலால் நகர், ஆதம் நகர், மேலத்தெரு சானாவயல், சவுக்கு கொள்ளை, நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகள் அதிரையின் ஒரு பகுதியாக கருதும் அளவிற்கு நகரம் விரிவடைந்துள்ளது.
கூடுதல் மானியம், கூடுதல் பணியாளர்கள், துப்புரவு மற்றும் குடிநீர் விநியோகத்திற்கான வாகனங்கள், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தும் வாய்ப்பு, தீயணைப்பு நிலையம், தாலுகா, மகளிர் காவல் நிலையம், மருத்துவமனை தரம் உயர்தல், சிமென்ட் சாலைகள், வீதிகளின் முக்கிய பகுதிகளில் ஹைமாஸ் லைட்டுகள், புதிய பேரூந்து நிலையம், மத்திய, மாநில அரசுகள் நகராட்சிகளுக்கு என ஒதுக்கும் சிறப்பு திட்டங்களும், கூடுதல் மானியமும் பெறுவதற்கு அதிரையை நகராட்சியாக தரம் உயர்த்த அதிரை வாழ் ஆர்வலர்கள் பலர் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றனர். நகராட்சி அந்தஸ்து பெற தேவையான மக்கள் தொகை, ஆண்டு வருமானம் ஆகியவற்றை அதிரை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதிரையை பேரூராட்சி தேர்வு நிலையிலிருந்து சிறப்பு நிலைக்கு தரம் உயர்த்த இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.
இதுகுறித்து 14 வது வார்டு உறுப்பினர் என்.கே.எஸ் முஹம்மது ஷெரிப் நம்மிடம் கூறுகையில்...
'அதிரை பேரூராட்சியை தேர்வு நிலையிலிருந்து தரம் உயர்த்தபட இருக்கிறது. அரசின் சார்பில் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும். இதற்கான முயற்சியில் நான் உட்பட பலரும் ஈடுபட்டோம். பேரூராட்சியின் தரம் உயர்வதால் ஊரின் அடிப்படை வசதிகள் பெருகும்' என்றார்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
சந்தோசம், நல்லதே நடக்கட்டும்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
Veandam
ReplyDeleteveandam
nakaratchche
veandam.
pothumpa. veduppa
appade erunthalum,?