முதற்கட்டமாக பேருந்து நிலைய மைய பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள டேக்ஸி வாகனங்களை அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின் பேரில் அதிரைக்கு வருகை தந்த வருவாய் ஆய்வாளர் வாகன ஓட்டுனர்களிடம் நேரடி விசாரணையை மேற்கொண்டார். தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிகிறது. மேலும் டேக்ஸி வாகனங்களை நிறுத்துவதற்கு மாற்று இடம் கை காட்டப்படும் என தெரிகிறது. இந்த பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக தீர்ந்துவிட்டால் இதன்பிறகு கடைகள் ஏலம் விடப்படும் பணிகள் துவங்கும் என தெரிகிறது.
முன்னதாக பேரூராட்சியின் சார்பில் கடைகள் கட்டும் பணி துவங்கியதிலிருந்து கடைகள் அனைத்தும் கட்டி முடிக்கும் வரை ஏராளமான வர்த்தகர்கள் குறிப்பாக பேக்கரி, உணவகம், டீ கடை, பழக்கடை, பலசரக்கு கடை, அடகு கடை ( வட்டிக்கடை ), மதுபானக்கடை, சர்பத் கடை, ஜவுளிக்கடை உள்ளிட்ட பல்வேறு தொழில் புரியும் உள்ளூர் மற்றும் வெளியூர் வாழ் வர்த்தகர்கள் கடைகள் கேட்டு பேரூராட்சி நிர்வாகத்தை அணுகியதாக தெரிகிறது.
அதிரை பேரூராட்சி நிர்வாகம் ஏலம் விடும் நாள், இடம் மற்றும் நிபந்தனைகள் குறித்த விவரங்ககளை எளிமையான முறையில் பலரும் அறிந்துடும் வகையில் பகிரங்க அறிவிப்பு செய்ய வேண்டும் என்றும், கடைகளை ஏலத்தில் எடுக்க எவ்வித அரசியல் குறுக்கீடும் இல்லாதவாறு உரிய முறையில் வெளிப்படையான டெண்டர் விடவும், உள்ளூரை சேர்ந்த படித்த பட்டாதாரி இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், புதிதாக தொழில் தொடங்கும் நபர்களுக்கு கடைகளை வழங்கவும், ஏற்கனவே மற்றொரு இடத்தில் தொழில் நடத்தி வருபவர், மேல் வாடகைக்கு விடும் நபர்கள் ஆகியோரை டெண்டரின் போது புறக்கணிக்கவும், ஒரு நபருக்கு ஒரு கடை என்பதை தீர்மானிக்கவும், மக்கள் அதிகமாகக் கூடும் பகுதியாகிய இங்கு வட்டிக்கடை, மதுக்கடை ஆகியவற்றிற்கு கடைகள் வழங்க வேண்டாம் என பொதுமக்களும், ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பகிரங்க ஏலம் மட்டும்மே பயனாலிக் உதவும் டெண்டர் முறை வகைகள் கையூட்டலுக்கு வழி வகுத்துவிடும் உஷார்!
ReplyDeleteஅரசியல் வாதிகளிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு அதாவது ஆளுங்கட்சி ஏதாவது திட்டம் கொண்டுவந்தால் எதிர்க்கட்சி எதிர்ப்பதும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி துவக்கிவைத்த திட்டத்தை முடக்குவது நாம் கண்டவை. அதிரை நகரில் கழிப்பிட கட்டிடம் கட்டி அது எந்தளவுக்கு இப்போ இருக்குன்னு எல்லோருக்கும் தெரியும் அதுபோல இல்லாமல் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் கட்டிங் பார்ப்பதோடு கட்டிடம் திறக்கப் படும்,
ReplyDeleteகுடிமகனுக்கு இடம் கொடுக்காதீங்க.