கனடாவில் இந்த வருடம் 2,60,000ற்கும் அதிகமான மக்கள், கனேடிய குடியுரிமையைப் பெற்றுள்ளதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய குடிவரவு மற்றும் குடியுரிமை துறை அமைச்சர் கிறிஸ் அலெக்ஸ்சான்டர் கூறுகையில்,
2014ம் ஆண்டில் இரண்டு லட்சத்து அறுபது ஆயிரத்திற்கும் அதிகமானோர் புதிதாக கனேடிய குடியுரிமையை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த எண்ணிக்கை கடந்த வருடம் கனேடிய குடியுரிமையை பெற்றவர்களை விட இரண்டு மடங்கு விட அதிகம் என்றும், கனேடிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு இவ்வளவு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமைக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடைமுறைகளில் அண்மையில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. இந்த புதிய நடைமுறையில், குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவு செய்யும் மூன்று படிமுறைகள் ஒரு படிமுறையாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடைமுறையால் இதுவரை 115,000ற்கும் அதிகமானோர் கனேடிய குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், கடந்த வருடத்தின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 90 சதவீதம் அதிகம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய குடிவரவு மற்றும் குடியுரிமை துறை அமைச்சர் கிறிஸ் அலெக்ஸ்சான்டர் கூறுகையில்,
2014ம் ஆண்டில் இரண்டு லட்சத்து அறுபது ஆயிரத்திற்கும் அதிகமானோர் புதிதாக கனேடிய குடியுரிமையை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த எண்ணிக்கை கடந்த வருடம் கனேடிய குடியுரிமையை பெற்றவர்களை விட இரண்டு மடங்கு விட அதிகம் என்றும், கனேடிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு இவ்வளவு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமைக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடைமுறைகளில் அண்மையில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. இந்த புதிய நடைமுறையில், குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவு செய்யும் மூன்று படிமுறைகள் ஒரு படிமுறையாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடைமுறையால் இதுவரை 115,000ற்கும் அதிகமானோர் கனேடிய குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், கடந்த வருடத்தின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 90 சதவீதம் அதிகம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.