முத்துப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருபவர் முருகேஷ். இவரது மனைவியிடம் அங்கு டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்த அல்போன்ஸ். போனில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த முருகேஷ் மற்றும் அவருடன் வேலை பார்க்கும் துப்புரவு பணியாளர்கள் அல்போன்சை தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த துப்புரவு பணியாளர்கள் அல்போன்சை தாக்கியுள்ளனர்.
ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் வேலைக்கு வந்த அல்போன்ஸ் மற்றும் அவரது நண்பர் தேவதாசையும் மற்ற தொழிலாளர்கள் மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அல்போன்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சூப்பர் வைசர் வீரமணி, கவுன்சிலர் அய்யப்பன் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் திருப்தி அடையாத துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் நிர்வாக அதிகாரி சித்திவிநாயக மூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அல்போன்சை பணியிடை நீக்கம் செய்வதாக அறிவித்தார். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. டிராக்டரை ஓட்ட ஆள் இல்லாததால் சூப்பர்வைசர் வீரமணி ஓட்டிச்சென்றார். இந்த போராட்டம் சுமார் 3 மணி நேரம் நடந்தது.
நன்றி: மாலைமலர்
இதனால் ஆத்திரம் அடைந்த முருகேஷ் மற்றும் அவருடன் வேலை பார்க்கும் துப்புரவு பணியாளர்கள் அல்போன்சை தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த துப்புரவு பணியாளர்கள் அல்போன்சை தாக்கியுள்ளனர்.
ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் வேலைக்கு வந்த அல்போன்ஸ் மற்றும் அவரது நண்பர் தேவதாசையும் மற்ற தொழிலாளர்கள் மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அல்போன்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சூப்பர் வைசர் வீரமணி, கவுன்சிலர் அய்யப்பன் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் திருப்தி அடையாத துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் நிர்வாக அதிகாரி சித்திவிநாயக மூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அல்போன்சை பணியிடை நீக்கம் செய்வதாக அறிவித்தார். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. டிராக்டரை ஓட்ட ஆள் இல்லாததால் சூப்பர்வைசர் வீரமணி ஓட்டிச்சென்றார். இந்த போராட்டம் சுமார் 3 மணி நேரம் நடந்தது.
நன்றி: மாலைமலர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.