.

Pages

Tuesday, December 23, 2014

துபாயில் சிறந்த செயல்திறன் சேவைக்காக அதிரையர் கெளரவிப்பு!

கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் துபையில் செயல்பட்டு வரும் Explorer என்கிற நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த வணிகரீதியான வரைபடங்கள், வழிகாட்டி கையேடுகள், சிறப்பு மலர்கள் மற்றும் வளைகுடா நாடுகள் குறித்த புகைப்பட புத்தகங்கள் போன்ற 150 வகையான தயாரிப்புகளை வழங்கிவரும் நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஆபிஸ் அஸிஸ்டெண்ட்டாக இணைந்து இன்று தனது அர்ப்பணிப்பு மற்றும் செயல்திறனால் Printing Organizer என்கிற பொறுப்புக்கு உயர்ந்துள்ள அதிரையை சேர்ந்த சகோதரர் சபீர் அஹமது S/o. ஹமீது சுல்தான் அவர்களை பாராட்டி கடந்த வாரம் நற்சான்றிதழுடன் ஐபேட் ஒன்றையும் வழங்கி கௌரவித்தார் Explorer நிறுவனத்தின் CEO Mr. Alister Mckenzie.

ஒரு அயல்நாட்டு நிறுவனத்தின் தனிநபர் கௌரவிப்பாக இருந்தாலும் இதுவும் அதிரைக்கும், அதிரையர்களுக்கும் பெருமை சேர்க்கின்ற, ஊக்கம் தருகின்ற ஒரு நிகழ்வே. கௌரவிக்கப்பட்ட சகோதரர் சபீர் அஹமது அவர்களையும் கௌரவித்த Explorer நிறுவனத்தையும் பாராட்டுகின்றோம், அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துகின்றோம்.

அதிரை அமீன்

6 comments:

  1. உழைப்பு , பதவி உயர்வு மென்மேலும் வளர வாத்துக்களுடன் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. மேலும் வளர வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ். .

    மப்ரூக் மப்ரூக் மப்ரூக்.

    ReplyDelete
  4. எனது நண்பன் பரிசு பெற்றது பெரும் மகிழ்ச்சி தருகிறது
    அவர் என்றும் இது போன்ற பாராட்டுகள் பெற வல்ல இறைவன் துணையாக இருக்கட்டும்
    மப்ரூக் சபீர்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.