.

Pages

Monday, December 22, 2014

தண்ணீரில் மிதக்கும் நடுத்தெரு அரசு நடுநிலைப்பள்ளி: போர்க்கால நடவடிக்கை தேவை ! ஆர்வலர்கள் கோரிக்கை !!

கடந்த மாதம் சிஎம்பி வாய்க்காலின் இணைப்பில் உள்ள அதிரையின் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் வந்தடைந்தது. இந்நிலையில் கடந்த நான்கு தினங்களாக சிஎம்பி வாய்கால் இணைப்பில் உள்ள குளங்களுக்கு மீண்டும் ஆற்று நீர் வந்துகொண்டிருக்கிறது.

இந்த ஆற்று நீரை செக்கடி குளத்திலிருந்து செட்டியா குளத்திற்கு நேற்று இரவு முதல் திருப்பி விடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை ஆற்று நீர் அருகில் உள்ள நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பளியில் புகுந்தது. இதனால் வகுப்பறையை சுற்றி காணப்படும் பகுதியில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. மேலும் வாய்கால் தெரு - கடைதெரு சாலைகளிலும், அருகில் உள்ள குடியிருப்பு பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இன்று காலை பள்ளிக்கூடத்திற்கு வருகை தந்த மாணவ மாணவிகள் தண்ணீர் சூழ்ந்துள்ளதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பேரூர் நிர்வாகம் போர்கால நடவடிக்கையாக பள்ளிக்கூடத்திலும், சாலையிலும், குடியிருப்பு பகுதியிலும் சூழ்ந்து காணப்படும் தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியின் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 comment:

  1. வடிகால்கள் சரிவர பராமரிக்கப் படவில்லை என்பதற்கு இதுவே சாட்சியாகும். பேருரார்ச்சி செயலற்று போய்விட்டது மாணவர்களின் நலன் கருதி தன்னார்வ தொண்டர்கள் சரி செய்ய முன்வரவேண்டும். காலம் தாழ்த்தினால் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புண்டு.

    தனியார் பள்ளிகளில் இந்நிலை காணமுடியாது இப்பள்ளி ஆசிரியர்களின் முன்நடவடிக்கை தேவை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.