உள்கட்சி நிர்வாகிகள் தேர்தலுக்காக கட்சித் தலைமை தேர்தல் பொறுப்பாளர், மேற்பார்வையாளர், ஆணையர்களையும் அறிவித்தது. இந்நிலையில் அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டு நிர்வாகிகளுக்கான தேர்தல் அதிரை லாவண்யா திருமண மஹாலில் இன்று காலை நடத்தப்பட்டது.
மாநில அமைச்சரும், அதிமுக கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளருமான திரு. வைத்திலிங்கம் வழிகாட்டுதல் படி, தேர்தல் நடத்தும் ஆணையர்களாக சேலம் புறநகர் மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் பி. சின்னப்பன், சேலம் புறநகர் எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஐ. கணேசன், ஆத்தூர் நகர்மன்ற தலைவர் பி. உமா ராணி, சேலம் புறநகர் எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சி.சாமியன்ணன் ஆகியோர் செயல்பட்டனர்.
இதில் அதிமுக கட்சியின் நகர உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாக்குகளை செலுத்தினர். கட்சி தலைமையிலிருந்து வெற்றி பெற்ற 21 வார்டு நிர்வாகிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.
மக்கள் அம்மாவை தேர்ந்தெடுத்தே ...அம்மா முதல்வராக ஆகமுடியலே இதுலே என்ன இந்த கட்சி மற்றவர்களை தேர்ந்தெடுக்கிறது ???
ReplyDeleteதலைக்கு மேலே வெள்ளம் போச்சு இனிமே ஜான் போனா என்ன முலம் போனா என்ன ???
மாநில அரசின் திட்டங்கள் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் அப்படியே செயல்படுத்தப்படாமல் உள்ளன...4 ஆண்டுகளில் முக்கிய திட்டங்கள் எதுவம் முடிந்து செயல்பாட்டிற்கு வந்ததாக தெரியவில்லை.
ReplyDeleteமுக்கிய பொறுப்புகளில் அவர்கள் தான் இருக்கிறார்கள் மாற்றினாலும் மாற்றாவிட்டாலும் இனி ஆட்சிக்கு வரப்போறதில்லை. அடுத்த தீர்ப்பு எப்படின்னு யாருக்கும் தெரியாது அதானால தொண்டர்களை உசாற்படுத்துவதார்க்கு இந்த தேர்தலா?
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
கட்சிக்காக அதிகம் உழைத்தவர்களில் கமால் காக்காவும் ஒருவர். இவருடைய இருப்பிடம் காட்டுக்குளம் அருகில் இருக்கின்றது, தற்போது மிகவும் நோய்வாய்பட்டு வாதம் தாக்கி பேச்சு மூச்சு இல்லாமல் ஒரே படுக்கையாக இருக்கின்றார். அவரின் குடும்பத்தார்கள் படுசிரமத்தில் இருக்கின்றனர்.
கட்சி சார்பாக அவருக்கு உதவிகள் ஏதாவது கிடைக்குமா?
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com