.

Pages

Friday, February 6, 2015

'அம்மா திட்டம்' முகாம்: 198 மனுக்கள் மீது உடனடி தீர்வு !

அதிரை ஏரிப்புறக்கரை கிராமத்தில் அரசின் அம்மா திட்டம் முகாம் இன்று காலை நடந்து. முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் கணேஷ்வரன் தலைமை வகித்தார். அரசு அலுவலர்கள் தங்க பிரபாகரன், கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளிடம் மனுக்களை பெற்றனர்.

முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, விரைவு பட்டா மாறுதல், பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், குடிநீர் வசதி, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் போன்ற கோரிக்கைகள் உள்பட 350 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 198 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் கணேஷ்வரன் பயனாளிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலைஅய்யன், ஏரிபுறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலா முத்துகிருஷ்ணன், ஏரிபுறக்கரை வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில் அதிரை பேரூராட்சியின் 8 வது வார்டு உறுப்பினர் 'சேனா மூனா' ஹாஜா முகைதீன் முகாமில் கலந்துகொண்ட பயனாளிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தார்.

ஏரிப்புறக்கரை கிராம வருவாய் எல்லைக்குட்பட்ட ஏரிபுறக்கரை கிராமத்தினர், பிலால் நகர்-ஆதம் நகர்-மேலத்தெரு-கீழத்தெரு-நடுத்தெரு கீழ்புறம்-புதுத்தெரு-தரகர் தெரு - கடற்கரைதெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 
 

1 comment:

  1. No need expanse , no need waste time , quickly finish work (with in 2 hours) . So, Thanks for Government.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.