அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 33 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று காலை பள்ளியின் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்கள் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதன் பின்னர் தலைமை உரை நிகழ்த்தினார்.
காதிர் முகைதீன் கல்லூரியின் துணை முதல்வர் உதுமான் முகைதீன், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹாஜா முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் திருமதி வளர்மதி வாழ்த்துரை வழங்கி கல்வியில் விளையாட்டில் சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவிகளுக்கு, ஆசிரியைகளுக்கு பரிசுகள் -சான்றிதல் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக தூய்மை திட்டத்தை வலியுறுத்தி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதன் பின்னர் சமாதான புறா பறக்கவிடப்பட்டு நிகழ்சிகள் இனிதே துவங்கியது.
பள்ளியின் ஆண்டறிக்கையை பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி எம். சுராஜ் வாசித்தார். இதில் பள்ளியின் சார்பில் கல்வியில் மாணவிகள் - ஆசிரியைகள் நிகழ்த்திய பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் பள்ளியின் சார்பில் நடத்தப்பட்ட சமூக விழிப்புணர்வு பணிகளையும் குறிப்பிட்டு பேசினார். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை ஜி. அகிலா பள்ளி மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் நிகழ்த்திய சாதனைகளை பட்டியலிட்டு ஆண்டரிக்கையாக வாசித்தார்.
முன்னதாக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரி திருமதி எஸ். நஜீம் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் முதுகலை ஆசிரியை திருமதி விஜயலட்சுமி இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.
விழாவில் பள்ளியின் சார்பில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் பொன்னாடைகள் போர்த்தி கெளரவிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை - உதவி தலைமை ஆசிரியை - உடற்கல்வி ஆசிரியை - ஆசிரியைகள் - மாணவிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.
இந்த விழாவில் எம்.கே.என் டிரஸ்ட் முன்னாள் உறுப்பினர் முஹம்மது இப்ராஹீம், சமூக ஆர்வலர் சிபஹத்துல்லா, அதிரை பைத்துல்மால் நிர்வாகி அப்துல் மாலிக், கவுன்சிலர் முஹம்மது ஷரீப், நூருல் அமீன், தவ்பீக் உள்ளிட்டோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், முன்னாள் ஆசிரியர்கள் - பெற்றோர்கள், பள்ளி அலுவலர்கள் - மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
12 ஆம் வகுப்பு படிக்கும் எனது இளைய மகளுக்கு 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் நிலை பெற்றமைக்கு பரிசுகள் வழங்கிய காதிர் முஹைதீன் பள்ளியின் நிர்வாகிகள் ,அதிரை பைத்துல்மால் மற்றும் மாஜிதா ஜிவல்லரி நிறுவனம் ஆகியோர்களுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் .
ReplyDeleteமாஷாஅல்லாஹ் ....இப்பள்ளியின் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது .இதில் என் மகள் 10 பரிசுகளை பெரும்பொழுது மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.மேலும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் பெருந்தகைகளுக்கும் ,சிறப்பு விருந்தினர்களுக்கும் என் நன்றிகள் பல.
ReplyDelete