தஞ்சை மாவட்டம் பேராவூரணி, பெருமகளூர், அதிரை பேரூராட்சிகள், பட்டுக்கோட்டை சேதுபாவா சத்திரம், பேராவூரணி, மதுக்கூர், பாபநாசம், திருவையாறு ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 1,153 குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க கடந்த [ 09-04-2012 ] அன்று நடந்த சட்டசபைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக 2012 & 2013 ஆம் ஆண்டுக்கான அறிவிப்பு வெளியிட்டு இதை செயல்படுத்துவதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன.
இந்தப் பணிகளுக்காக திருச்சியிலிருந்து வருகை தந்த குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் கடந்த 08-04-2013 அன்று அதிரையில் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கூட்டு குடிநீர் திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் அதிரையில் துவங்கியுள்ளது. இந்த பணிகளுக்காக பைப் குழாய்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான அடுத்தக்கட்ட பணிகள் விரைவில் துவங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
நெடுநாளைய ஆசை, நெருங்கி வந்து விட்டது, விரைவில் முடித்து தர வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.(காசுக்கடை கோஸு முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- kmajamalmohamed@gmail.com
நமதூருக்கு கொல்லிடம் கூட்டுகுடிநீர் என்பது எந்த அளவுக்கு பயன்தரும் என்பதனை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ReplyDeleteகூட்டு குடிநீர் திட்டம் மக்களுக்கு பயன்தருமா என்று சற்று பார்க்க வேண்டும், அதிகளவில் மழை பெய்ததால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீர் வறண்டு கிடந்த கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்து விவசாயத்திற்கு பயன்படாமல் கடலில் வீணாக சேர்ந்தது. நீரை தேக்கி வைக்க தடுப்பணைகள் எதுவும் கிடையாது.
ReplyDeleteநிலத்தடி நீரை அதிகமாகினால் தான் மேற்சொன்ன திட்டம் மக்களுக்கு நிறைவேறும். வீட்டுக் வீடு மழைநீர் சேமிப்பு திட்டத்தை விட ஊரில் உள்ள குளங்களை, ஆறுகளை பராமரித்து நிலத்தடி நீர் உயர்த்த வேண்டும், சட்டீலிருந்தால் தான் ஆப்பையில் வரும், வெறும் போர் போட்டு என்னசெய்வது?
ஜூன் மாதத்தில் குருவை சாகுபடிக்கு மேட்டூர் நீரை திறப்பது வழக்கம், மக்கள் முதல்வர் தேர்தலை வைத்துக்கொண்டு இப்பவே தண்ணீரை திறந்ததால் வீணாகா கடலில் சேருகிறது, விவசாயத்திற்கு பயன் இல்லை, சுயநலமிக்க திட்டத்தால் யாருக்கும் பயன் இருக்காது, அந்த டயலாக் தான் நினைவு வருது, " ஆண்டவன் வந்தாலும் தமிழ்நாட்டை காப்பாத்த முடியாது! "
09-04-2012 போட்ட திட்டம் இப்ப தான் செயல் வடிவம் கிடைத்து இருக்கு இனி எத்தனை ஆண்டோ.......