முத்துப்பேட்டை அடுத்த பாண்டி சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி செட்டியர் மகன் தண்டாயுதபாணி(45). இவர் நேற்று முன்தினம்; இரவு தனது பைக்கிள் வீட்டிலிருந்து புறப்பட்டு முத்துப்பேட்டைக்கு சென்றார். ஆலங்காடு படித்துரை அருகில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு முன்னால் சரக்கு ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது தண்டாயுதபாண்டி சென்ற பைக் எதிர்பாராவிதமாக லாரி பின்பக்கம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தண்டாயுதபாணிக்கு பலத்த காயம் ஏற்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து லாரியை கைபற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை


No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.