.

Pages

Tuesday, February 3, 2015

சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் செய்திகள் குற்றமல்ல !

டெல்லி: உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பதிவு செய்யப்படும் கருத்து சுதந்திரமான மெசேஜ்களை சமூக ஊடங்கங்களில் வெளியிடுவதை குற்றமாக  கருத முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தகவல் தொழிநுட்பத்தின் சவால்கள் நிறைந்த சட்டம் குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. சமூக வலைதளங்களில் எரிச்சலூட்டும், சிரமமான  மற்றும் அபாயகரமான செய்திகளை பதிவு செய்யும் நபர்களை போலீசார் கைது செய்ய சட்டத்தில் அதிகாரம் உள்ளது.

இதுகுறித்த கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்த அரசு விரும்பவில்லை என்று அரசு தரப்பு, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. ஒருவர் தனது பேச்சு சுதந்திரத்தை  நடைமுறைப்படுத்தவது அல்லது அமுலாக்குவது குற்றமல்ல என்று கூறிய அரசு தரப்பு சைபர் குற்றங்களுக்கு ஏற்றவாறு இந்த சட்டம் மாற்றி செயல்படும்  என்றும் தெரிவித்தது.

பாதுகாப்பான கருத்து சுதந்திரம் மற்றும் சட்டத்தை மீறுதல் தொடர்பாக கண்காணிக்க ஒரு குழுவை அமைக்கவும் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

நன்றி: தினகரன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.