.

Pages

Wednesday, February 4, 2015

சாலை மேம்படுத்தும் பணியால் பள்ளமாக காட்சியளிக்கும் பேருந்து நிலைய பகுதி !

அதிரை பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் ஈசிஆர் இணைப்பு சாலை நீண்ட காலமாக சீர் செய்யப்படாததால் இந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் மிகவும் அவதியுற்று வந்தனர்.

இந்நிலையில் அதிரை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில்,'தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை சார்பில் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து சேர்மன்வாடி வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலையை 800 மீட்டர் தூரத்தில், 7 மீட்டர் அகலத்தில் மேம்படுத்தும் விதத்தில் சுமார்  ₹ 1.50 கோடி மதிப்பீட்டில் கடந்த [ 13-11-2014 ] அன்று டெண்டர் விடப்பட்டது.

இதற்கான முதற்கட்ட பணிகள் கடந்த [ 27-12-2014 ] அன்று துவங்கியது. இதில் அதிரை பேரூந்து நிலைய ஈசிஆர் இணைப்பு சாலையிலிருந்து - பட்டுக்கோட்டை செல்லும் 800 மீட்டர் வரையிலான சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் காவல் துறை உதவியுடன் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர். இதையடுத்து பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையை மேம்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பேருந்து நிலையப்பகுதியில் காணப்படும் சாலை முழுவதையும் அகலப்படுத்தியும், உயர்த்தியும் வருகின்றனர். இதனால் சாலையை ஒட்டி காணப்படும் கடைகள் பள்ளத்தில் மூழ்கியது போல் காட்சியளிக்கிறது. பேருந்து நிலையமும் பள்ளமாக காட்சியளிக்கிறது. இனிவரும் மழைகாலங்களில் தாழ்வாக காட்சியளிக்கும் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்பு இருப்பதாக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தண்ணீர் தேங்கி நிற்பதை தடுக்கும் வகையில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.