.

Pages

Sunday, December 17, 2017

அதிராம்பட்டினத்தில் மினி மாரத்தான் ஓட்டப்போட்டி ~ முன்பதிவுக்கு அழைப்பு !

கோப்புப்படம்
அதிராம்பட்டினம், டிச.17
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கடந்த டிச.13 ந் தேதி அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு அவ்வமைப்பின் மாவட்டத் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன் தலைமை வகித்தார். இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய பிரச்சாரமான (healthy people healthy nation) ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், அதிராம்பட்டினத்தில் மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டப்போட்டி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அவ்வமைப்பின் நிர்வாகிகள் - உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அதன்படி, மாரத்தான் ஓட்டப்போட்டி அதிராம்பட்டினத்தில் எதிர்வரும் 30-12-2017 சனிக்கிழமை தக்வா பள்ளிவாசல் முக்கத்திலிருந்து தொடங்கி 5 கிலோ மீட்டர் தூரம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை வழியாக மீண்டும் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நிறைவு பெரும். இதில் விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும், மாணவர்களும் கலந்து கொள்ளுமாறு அவ்வமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

1 comment:

  1. ஆரோக்கியமான மக்கள் வாழ்விற்காக மினி மராத்தான் போட்டி, நம்மவூரில் இருக்கும் எல்லாக்கட்சியும் ஏதாவது ஒரு நோக்கத்தோடு இம்மாதிரியான போட்டிநடத்துவது நல்லது., இதன் மூலம் ஒன்றுகூடல் நிகழ்ந்து அன்பை பரிமாறுவதோடு ஆரோக்கியத்தைப்பற்றி தெரிந்துக்கொண்டு செயல்படலாம். ஒரு ஜாலி வாக்காக போய்வரலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.