அதிராம்பட்டினம், டிச.17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதி பள்ளிகளில் சுற்றுச்சூழல் கல்வி வழங்க அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் சார்ப்பில் கோரிக்கை மனு அனுப்பியது.
அவ்வமைப்பின் தலைவர் வ. விவேகானந்தம் அனுப்பிய மனுவில் கூறியிருப்பது;
‘தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி மற்றும் இப்பகுதியை சுற்றியுள்ள பள்ளிகளில் பயிலும் தேசிய மாணவர்படை, தேசிய பசுமைப்படை, நாட்டு நலப்பணித்திட்டம், ஜுனியர் ரெட் கிராஸ், சாரணர் படை போன்ற அமைப்புகளில் உள்ள மாணவ தொண்டர்களுக்கும் மற்றும் இதர மாணவ, மாணவியர்களுக்கும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் சுற்றுச்சூழல் கல்வி, திடக்கழிவு மேலாண்மை பயிற்சி, வீட்டு காய்கறித் தோட்டம் அமைத்தல், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு போன்றவற்றில் பயிற்சி அளித்து அதன் மூலம் மேற்கண்ட பகுதிகளை தூய்மையான பசுமையான பகுதிகளாக வைத்திட விரும்புகிறோம்.
வருகிற 02.12.2018 முதல் இப்பயிற்சிகளை மாணவ, மாணவிகளின் வழக்கமான பாடவேளைகள் பாதிக்காதவாறு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சிகளை அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலர்கள், பட்டுக்கோட்டை ஜுனியர் சேம்பர் இண்டர்நேஷனல் அமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிபுணர்களை கொண்டு நடத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே, அதிராம்பட்டினம் பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி முகாம்களை நடத்திக் கொள்ள அனுமதியளிக்க வேண்டுமென கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதி பள்ளிகளில் சுற்றுச்சூழல் கல்வி வழங்க அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் சார்ப்பில் கோரிக்கை மனு அனுப்பியது.
அவ்வமைப்பின் தலைவர் வ. விவேகானந்தம் அனுப்பிய மனுவில் கூறியிருப்பது;
‘தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி மற்றும் இப்பகுதியை சுற்றியுள்ள பள்ளிகளில் பயிலும் தேசிய மாணவர்படை, தேசிய பசுமைப்படை, நாட்டு நலப்பணித்திட்டம், ஜுனியர் ரெட் கிராஸ், சாரணர் படை போன்ற அமைப்புகளில் உள்ள மாணவ தொண்டர்களுக்கும் மற்றும் இதர மாணவ, மாணவியர்களுக்கும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் சுற்றுச்சூழல் கல்வி, திடக்கழிவு மேலாண்மை பயிற்சி, வீட்டு காய்கறித் தோட்டம் அமைத்தல், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு போன்றவற்றில் பயிற்சி அளித்து அதன் மூலம் மேற்கண்ட பகுதிகளை தூய்மையான பசுமையான பகுதிகளாக வைத்திட விரும்புகிறோம்.
வருகிற 02.12.2018 முதல் இப்பயிற்சிகளை மாணவ, மாணவிகளின் வழக்கமான பாடவேளைகள் பாதிக்காதவாறு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சிகளை அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலர்கள், பட்டுக்கோட்டை ஜுனியர் சேம்பர் இண்டர்நேஷனல் அமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிபுணர்களை கொண்டு நடத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே, அதிராம்பட்டினம் பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி முகாம்களை நடத்திக் கொள்ள அனுமதியளிக்க வேண்டுமென கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.