அதிராம்பட்டினம், பிப்.13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பு நிர்வாகிகளின் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் துணைத் தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். தலைவர் பேராசிரியர் எஸ். பர்கத், செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், ஜக்காத் நிதி வசூலிப்புக்கு பாதகம் வராதவாறு, சிக்கனமான செலவில், திருக்குர் ஆன் மாநாடு இரண்டு நாட்களும், மதநல்லிணக்க மாநாடு ஒரு நாள் நடத்துவது எனவும், மாநாடு செலவீனங்களுக்கான நிதியை மாநாடு நடத்த ஆர்வம் உள்ளவர்களிடமிருந்து திரட்டலாம் என தீர்மானிக்கப்பட்டது. மாநாடு இடம் மற்றும் தேதி அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்துகொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டன.
கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் வழக்குரைஞர் ஏ.முனாப், எம்.இசட். அப்துல் மாலிக், ஏ. முகமது முகைதீன், ஏ.எஸ் அகமது ஜலீல், முகமது இப்ராஹீம், அப்துல் ஜலீல், எம்.நிஜாமுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பு நிர்வாகிகளின் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் துணைத் தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். தலைவர் பேராசிரியர் எஸ். பர்கத், செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், ஜக்காத் நிதி வசூலிப்புக்கு பாதகம் வராதவாறு, சிக்கனமான செலவில், திருக்குர் ஆன் மாநாடு இரண்டு நாட்களும், மதநல்லிணக்க மாநாடு ஒரு நாள் நடத்துவது எனவும், மாநாடு செலவீனங்களுக்கான நிதியை மாநாடு நடத்த ஆர்வம் உள்ளவர்களிடமிருந்து திரட்டலாம் என தீர்மானிக்கப்பட்டது. மாநாடு இடம் மற்றும் தேதி அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்துகொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டன.
கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் வழக்குரைஞர் ஏ.முனாப், எம்.இசட். அப்துல் மாலிக், ஏ. முகமது முகைதீன், ஏ.எஸ் அகமது ஜலீல், முகமது இப்ராஹீம், அப்துல் ஜலீல், எம்.நிஜாமுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.