.

Pages

Tuesday, February 13, 2018

அதிராம்பட்டினம் விவசாயி தோட்டத்தில் கொம்பு முளைத்த அதிசய தேங்காய்!

அதிராம்பட்டினம், பிப்.13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஏ.வி.எம் அபூபக்கர் (38). விவசாயி. இவரது அணைக்காடு தோட்டத்தில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன.

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் தனது தோட்டத்துக்கு சென்ற அபூபக்கர், வீட்டுக்கு தேவையான தேங்காய்களை பறித்தார். அதில் இரண்டு தேங்காய்கள் இரண்டு கொம்புகளுடன் இருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தார். பின்னர், அவற்றை வீட்டுக்கு எடுத்து வந்து குடும்பத்தினரிடம் காண்பித்தார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அபூபக்கர் வீட்டுக்கு வந்து கொம்பு முளைத்த அதிசய தேங்காய்களை வியப்புடன் பார்த்துச் சென்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.