.

Pages

Thursday, February 1, 2018

ஓமன் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ள வெளிநாட்டினர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க உத்தரவு!

அதிரை நியூஸ்: பிப்.01
ராயல் ஓமன் போலீஸின் (ROP) புதிய உத்தரவின்படி, தற்போது 10 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கத்தக்க லைசென்ஸ்கள் வழங்கப்படுகின்றன. இந்த நடைமுறை எதிர்வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்கும் வெளிநாட்டினர் ஒவ்வொரு 2 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என மாற்றியமைக்கப்படுகிறது. ஏற்கனவே 10 வருட லைசென்ஸ் பெற்றவர்கள் அது காலாவதியாகும் வரை அப்படியே உபயோகித்துக் கொள்ளலாம்.

மிகவும் கடுமையான சோதனைகளுக்கு பின் வழங்கப்படுவதால் ஓமன் டிரைவிங் லைசென்ஸூகளுக்கென சர்வதேச ரீதியில் மிகுந்த மதிப்புள்ளது. இந்த மதிப்பினை கெடுக்கும் வகையில் பலர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஓமன் லைசென்ஸூகளை தவறாக பயன்படுத்துகின்றனர், குறிப்பாக லைட் வெயிட் லைசென்ஸ் உள்ளவர்கள் ஹெவி வெயிட் வாகனங்களை இயக்குவதாக புகார்கள் வருகின்றன. இத்தகைய தவறுகளை தடுக்கவே இச்சட்டம் கொண்டு வரப்படுவதாகவும் ராயல் ஓமன் போலீஸ் தெரிவித்துள்ளது.

மேலும் புதிதாக புதிய டிரைவர்களுக்கு கரும்புள்ளிகள் (Black Points) வழங்கும் திட்டமும் துவக்கப்பட்டுள்ளது. புதிய டிரைவர்களுக்கு கண்காணிப்புத் திட்டத்தின் (Probation Scheme) கீழ் 1 வருட தற்காலிக லைசென்ஸ் மட்டுமே வழங்கப்படும். இந்த 1 வருட காலத்திற்குள் 10 கரும்புள்ளிகளுக்கு மேல் பெறுபவர்கள் மேலும் பல பயிற்சி வகுப்புக்களுக்கு அனுப்பப்படுவர். 7 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு மேலும் 1 வருடத்திற்கு மட்டுமே லைசென்ஸ் புதிப்பித்து தரப்படும்.

அதேவேளை ஓமன் குடிமகன்களுக்கு மட்டும் கண்காணிப்பு காலத்தில் 6 கரும்புள்ளிகளுக்கு குறைவாக பெறுபவர்களுக்கு 10 வருட லைசென்ஸ் தரப்படும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.