.

Pages

Monday, February 12, 2018

துபையில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு 9 நாட்களுக்கு புரூஜ் கலீபாவில் லேசர் லைட் ஷோ!

அதிரை நியூஸ்: பிப்.12
உலகின் மிக உயரடான கட்டிடமான துபை புரூஜ் கலீபா டவரில் விழாக்காலங்களுக்கு ஏற்றவாறு அமைக்கப்படும் 'தீம்' (பேசு பொருள்) அடிப்படையில் லேசர் லைட் (Laser Light Show) கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 2018 ஆங்கிலப் புத்தாண்டு, இந்திய குடியரசு தினத்தையொட்டி இந்திய தேசியக்கொடியின் வண்ணங்களில் மிளிர்ந்த ஒளிவெள்ளக் கண்காட்சி போன்றவைகளை குறிப்பிடலாம்.

அமீரகத்திலும் தற்போது சுமார் 253,000 சீனர்கள் வாழ்ந்து வருகின்றனர், சீனாவின் சர்வதேச வர்த்தக சந்தையாகவும் துபை திகழ்வதால் சீனர்களை வசீகரிக்கும் நோக்கில் இந்த வருட சீனப் புத்தாண்டை லேசர் ஷோ எனப்படும் வர்ணஜாலா ஒளிவெள்ளம் மற்றும் சீன இசையை பாய்ச்சி வரவேற்க திட்டமிட்டுள்ளது துபை.

துபை புரூஜ் கலீபா டவரில் லேசர் லைட்டுகளின் வழியாக சீனர்கள் போற்றும் டிரகான் உருவம், சீனப் பெருஞ்சுவர், அந்தரத்தில் பறப்பது போன்றவற்றுடன் அமீரகத்தின் பிணைப்பை உறுதி செய்யும் வகையில் கட்டப்பட்டு வரும் துபை கிரீக் டவர், துபை ஃபவுண்டைன் போன்றவையும் இடம் பெறவுள்ளது.

எதிர்வரும் பிப்ரவரி 16 முதல் 24 வரை 9 நாட்களுக்கு தினமும் இரவு 8 மணிமுதல் 10 மணிவரை இந்த லேசர் ஷோ இடம்பெறும். அப்போது சீன இசைக்கு ஏற்றவாறு தண்ணீர் நடன (Water Dance Show) காட்சியும் இடம்பெறும்.

குறிப்பு: தற்போது 2018 ஆம் வருடத்தை வரவேற்க அமைக்கப்பட்ட லேசர் ஷோ எதிர்வரும் மார்ச் மாதம் இறுதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஸ்பெஷல் ஷோ அவற்றிற்கு இடையே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.