.

Pages

Monday, February 12, 2018

பட்டுக்கோட்டை - திருவாரூர் அகல ரயில் பாதை பணியை துரிதப்படுத்த பரசுராமன் எம்பியிடம் நேரில் வலியுறுத்தல்!

அதிராம்பட்டினம், பிப்.12
பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையிலான பணிகளை விரைந்து முடிக்கவும், பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையிலான ரயில் போக்குவரத்து சேவையை உடனடியாக தொடங்கவும்,  பட்டுக்கோட்டை - மன்னார்குடி, பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் ஆகிய வழிகளில் புதிய அகல ரயில் பாதை திட்டப்பணிக்கு நில எடுப்புப் பணியை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அதிராம்பட்டினத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அப்துல் ரெஜாக், அகமது இப்ராஹீம், அப்துல் ஜலீல் ஆகியோர் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் பரசுராமன் எம்.பி யை ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது இல்லத்தில் சந்தித்து வலியுறுத்தினர். அப்போது,  இதுதொடர்பாக தேவையான நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாக அவர்களிடம் உறுதியளித்தாராம்.

மேலும், இதுதொடர்பாக கோரிக்கை அடங்கிய மனுவை, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல், தென்னக இரயில்வே திருச்சி மண்டல மேலாளர் ஆகியோருக்கு தனித்தனியாக தபாலில் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.