தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள மைதானப் பகுதிகளில், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட இஜ்திமா மாநாடு (பிப்.09) வெள்ளிக்கிழமை மாலை அஸ்ர் தொழுகைக்கு பிறகு தொடங்கி சனிக்கிழமை (பிப்.10) இரவு இஷா தொழுகை வரை நடைபெற்றது.
மாநாடு துளிகள்:
1. அதிராம்பட்டினத்தில் கடந்த 1983 ஆம் ஆண்டு இஜ்திமா மாநாடு நடைபெற்றது. கடந்த 35 ஆண்டுகளுக்கு பிறகு, 2 வது தடவையாக மீண்டும் இஜ்திமா மாநாடு இப்பகுதியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
2. இந்த மாநாட்டில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு தொடர் சொற்பொழிவு ஆற்றினர். இதில், இறையச்சம், வாழ்வியல் நெறிமுறைகள், நற்பண்புகள், மறுமை வாழ்வு பற்றிய சிந்தனைகள் இடம் பெற்றது.
3. மாநாட்டில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.
4. மாநாட்டு நிறைவில் சுமார் 30 நிமிடங்கள் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், அனைவரும் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.
5. இஜ்திமா மாநாட்டையொட்டி, அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அதன் வளாகப் பகுதிகளில் தொழுகையாளிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இடப்பற்றாக்குறையால் பள்ளிவாசல் எதிரே அமைக்கப்பட்ட பந்தலில் அமர்ந்து தொழுதனர்.
6. வாய் பேசாத ~ காது கேளாத வருகையாளர்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
7. ஒளு செய்வதற்கு, கழிவறை, சிறுநீர் கழிக்க பெரிய ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அதன் அருகில் உள்ள மைதானப் பகுதிகளில் 3 இடங்களில் தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மேலும், அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது,
8. தஞ்சை, கும்பகோணம், அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியினருக்கு தனித்தனியாக உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டு அதில், இரவு, காலை, பகல் ஆகிய 3 வேளைகளுக்கான உணவு பரிமாறப்பட்டது. இப்பணிகளில் தன்னார்வ களப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.
9. மாநாட்டில் மருத்துவ முதலுதவிக்காக மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
10. மாநாட்டில், மருத்துவ அவசர சிகிச்சைக்காக, தமுமுக அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மதுக்கூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியவை நிறுத்தப்பட்டு இருந்தது. மேலும், பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையக் காவலர்கள் அடங்கிய மீட்புக்குழுவினர் தீ அணைப்பு வாகனத்தை தயார் நிலையில் நிறுத்தி வைத்து இருந்தனர்.
11. மாநாட்டில் போக்குவரத்து சீர் செய்தல், மாநாடு இடம் வழிகாட்டுதல், அவசர உதவி போன்ற பணிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சி தன்னார்வ களப்பணியாளர்கள் சுமார் 60 க்கும் மேற்பட்டோர் முழு நேரப்பணிகளில் ஈடுபட்டனர். மாநாட்டில் அவசர உதவி மையம் அமைத்து இருந்தனர்.
12. குடிநீர் விநியோகம், ஜூஸ் விநியோகம், தேநீர் விநியோகம் போன்ற பணிகளில் அதிராம்பட்டினம் மஹல்லா சங்கங்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர், ஆட்டோ ஓட்டுநர்கள் நலச் சங்கத்தினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
13. அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் மற்றும் பிரதான பஸ் நிறுத்தங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார், வேன், ஆட்டோ போன்ற வாகனங்கள் மூலம் பிற ஊர் வருகையாளர்களை மாநாடு நடைபெறும் இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.
14. மேலும், பிற ஊர் வருகையாளர்களுக்கு வழிகாட்ட பிரதான சாலைப் பகுதிகளில் 'வழிகாட்டி பதாகைகள்' ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தன.
15. போக்குவரத்து நெருக்கடியைப் போக்க ஆம்னி பேருந்துகள் மற்றும் அரசு போக்குவரத்து பேருந்துகள் அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் பயணிகளை இறக்கி விட அறிவுறுத்தப்பட்டன. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வானங்கள் பெரிய ஜும்மா பள்ளிவாசல் பின்புறம் அமைந்துள்ள மைதானம் மற்றும் புளியமரக் கொல்லை ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டது.
16. மாநாட்டில் இஸ்லாமிய மார்க்க நூல்கள், தொப்பி, அத்தர், பழங்கள், சிப்ஸ், குளிர் பானங்கள், தின்பண்டங்கள், பேக்கரி கேக் வகைகள், பட்டர் பிஸ்கட்ஸ், மலைத்தேன், பனங்கருப்பட்டி, மசாலா பவுடர், சூப், சுண்டல் ஆகியவை விற்பனைக்காக தனி ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
17. மாநாட்டையொட்டி அதிராம்பட்டினம் கடைத்தெரு, பேருந்து நிலையம் மற்றும் தக்வா பள்ளிவாசல் மீன் மார்க்கெட் உள்ளிட்ட பெரும்பாலான பகுதி வியாபாரிகள் சனிக்கிழமை கடையடைப்பு செய்தனர்.
18. மாநாட்டில் மஹல்லா சங்கம் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது.
19. தூய்மைப் பணிகளில் அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
20. மாநாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்தை சேர்ந்த முகமது பாருக் மகன் அகமது அப்துல் காதர் மணமகனுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
21. மாநாட்டிற்கு வருகை தந்த பள்ளிச் சிறுவர்கள் காலையில் அருகில் உள்ள செடியன் குளத்தில் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர்.
22. பெரிய ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பரந்த மைதானங்களில் அனைத்து வசதிகளும் அருகே அருகே ஏற்பாடு செய்து இருந்ததால், மாநாடு வருகையாளர்களை பெரிதும் கவர்ந்தது. மாநாடு ஏற்பாட்டில் முழு நேரப்பணிகளில் ஈடுபட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நிறைவில் பிரார்தனை செய்யப்பட்டது.
- மாநாட்டில் இருந்து...
எம். நிஜாமுதீன்,
ஏ.சாகுல் ஹமீது,
என், முகமது அஜீம்
மர்ஜூக்
எல்லா புகலும் இறைவனுக்கே
ReplyDeleteஎல்லா புகலும் இறைவனுக்கே
ReplyDelete