பேராவூரணி பிப்.13
தென்னை சார்ந்த தொழில் செய்வோர் கூட்டமைப்பு சார்பில்
அவசர ஆலோசனை கூட்டம் பிப்.12 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளி எதிரில், தனம் திருமண மகாலில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அக்ரி கோவிந்தராஜூ தலைமை வகித்தார். மா.கணபதி வரவேற்றார். முன்னிலை வகித்த முத்துவைரவன், லூர்துநாதன், இளங்கோ ஆகியோர் தொழிலில் உள்ள நெருக்கடிகள் குறித்து விளக்கிப் பேசினர்.
கூட்டத்தில் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 400 க்கும் மேற்பட்ட கயறு தொழிற்சாலை வைத்திருப்போரை ஒருங்கிணைத்து புதிதாக சங்கத்தை கட்டமைத்தல், தேங்காய் மட்டை விலை உயர்வு காரணமாக, தொழில் நடத்த முடியாத சூழல் உள்ளது.
இதுகுறித்து வரும் பிப்.15 ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மீண்டும் கூடி பேசி முடிவு செய்வது. தொடர்ந்து தொழிற்சாலைகளை மூடி போராடுவது, அதுவரை மட்டைகளை கொள்முதல் செய்வதில்லை எனவும், கோர்வை மட்டைகளை தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில் செய்வோருக்கு மட்டுமே வழங்கவேண்டும். வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்வதை தடைசெய்து, தொழிலை நலிவடைய செய்யாமல் காப்பாற்ற வலியுறுத்தி தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது, மட்டை உற்பத்தியாளர், கயறு தொழிற்சாலை நடத்துவோர் என இருதரப்புக்கும் கட்டுப்பாடியாகும் வகையில் கலந்து பேசி விலை நிர்ணயம் செய்யவேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் க.அன்பழகன், முத்தலிப், சுரேஷ், குமணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்திலேயே தென்னை மற்றும் அதனை சார்ந்த உபதொழில்களுக்கு பெயர் பெற்றது தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியாகும். தேங்காய் உற்பத்தி, கொப்பரை தயாரித்தல், கயறு தயாரித்தல், தென்னை மட்டை கழிவு பஞ்சிலிருந்து கேக் தயாரித்து ஏற்றுமதி செய்தல் என பல்வேறு துணைத் தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் இப்பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பெற்று வருகின்றனர்.
ஆனால் கடந்த சில மாதங்களாகவே தென்னை நார், தென்னை உற்பத்தி பொருட்கள் தயாரிப்போர், தென்னை மட்டையை ஏற்றி செல்லும் லாரி உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரும், தொழிலில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து ஆலோசனை நடத்தி தொழில் செய்வதில் உள்ள இடர்பாடுகளை களைந்து, தேக்க நிலை ஏற்படாமல் இருக்க, தென்னை சார்ந்த தொழில் செய்வோர் கூட்டமைப்பு ஏற்படுத்தி ஆலோசனை நடத்தினர்.
தென்னை சார்ந்த தொழில் செய்வோர் கூட்டமைப்பு சார்பில்
அவசர ஆலோசனை கூட்டம் பிப்.12 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளி எதிரில், தனம் திருமண மகாலில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அக்ரி கோவிந்தராஜூ தலைமை வகித்தார். மா.கணபதி வரவேற்றார். முன்னிலை வகித்த முத்துவைரவன், லூர்துநாதன், இளங்கோ ஆகியோர் தொழிலில் உள்ள நெருக்கடிகள் குறித்து விளக்கிப் பேசினர்.
கூட்டத்தில் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 400 க்கும் மேற்பட்ட கயறு தொழிற்சாலை வைத்திருப்போரை ஒருங்கிணைத்து புதிதாக சங்கத்தை கட்டமைத்தல், தேங்காய் மட்டை விலை உயர்வு காரணமாக, தொழில் நடத்த முடியாத சூழல் உள்ளது.
இதுகுறித்து வரும் பிப்.15 ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மீண்டும் கூடி பேசி முடிவு செய்வது. தொடர்ந்து தொழிற்சாலைகளை மூடி போராடுவது, அதுவரை மட்டைகளை கொள்முதல் செய்வதில்லை எனவும், கோர்வை மட்டைகளை தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில் செய்வோருக்கு மட்டுமே வழங்கவேண்டும். வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்வதை தடைசெய்து, தொழிலை நலிவடைய செய்யாமல் காப்பாற்ற வலியுறுத்தி தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது, மட்டை உற்பத்தியாளர், கயறு தொழிற்சாலை நடத்துவோர் என இருதரப்புக்கும் கட்டுப்பாடியாகும் வகையில் கலந்து பேசி விலை நிர்ணயம் செய்யவேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் க.அன்பழகன், முத்தலிப், சுரேஷ், குமணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்திலேயே தென்னை மற்றும் அதனை சார்ந்த உபதொழில்களுக்கு பெயர் பெற்றது தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியாகும். தேங்காய் உற்பத்தி, கொப்பரை தயாரித்தல், கயறு தயாரித்தல், தென்னை மட்டை கழிவு பஞ்சிலிருந்து கேக் தயாரித்து ஏற்றுமதி செய்தல் என பல்வேறு துணைத் தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் இப்பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பெற்று வருகின்றனர்.
ஆனால் கடந்த சில மாதங்களாகவே தென்னை நார், தென்னை உற்பத்தி பொருட்கள் தயாரிப்போர், தென்னை மட்டையை ஏற்றி செல்லும் லாரி உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரும், தொழிலில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து ஆலோசனை நடத்தி தொழில் செய்வதில் உள்ள இடர்பாடுகளை களைந்து, தேக்க நிலை ஏற்படாமல் இருக்க, தென்னை சார்ந்த தொழில் செய்வோர் கூட்டமைப்பு ஏற்படுத்தி ஆலோசனை நடத்தினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.