.

Pages

Saturday, September 1, 2018

இறகுப்பந்து போட்டியில் காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி மாணவிகள் சாதனை!

அதிராம்பட்டினம், செப்.01
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இறகுப்பந்து இரட்டையர், ஒற்றையர் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்தி உள்ளனர்.

தஞ்சாவூர் பள்ளிக்கல்வித்துறை சார்பில், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி ஆகிய கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டி பட்டுக்கோட்டை பேட்மிட்டன் கிளப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஏ.அஸ்மிதா, ஏ. ஆமீனா மரியம் ஆகியோர் இறகுப்பந்து இரட்டையர், ஒற்றையர் பிரிவில் கலந்துகொண்டு, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மண்டல போட்டியில் விளையாட தகுதி பெற்றனர்.

இதையடுத்து, சாதனை மாணவிகளை காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்கள் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன், பள்ளி தலைமை ஆசிரியை எம்.சுராஜ், உடற்கல்வி ஆசிரியை ஜி.அகிலா, ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள், மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.