.

Pages

Saturday, September 1, 2018

தஞ்சாவூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு (முழு விவரம்)

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (01.09.2018) சனிக்கிழமை வெளியிட்டார்.

வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: -
இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு. தஞ்சாவூர் மாவட்டத்தில் 01-01-2018 அன்று தகுதி நாளாகக் கொண்டு தயார் செய்யப்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (01-09-2018) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது,

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில்  திருவிடைமருதூர் சட்ட மன்ற தொகுதியில் 1,18,924 ஆண் வாக்காளர்களும்,  1,17,109 பெண் வாக்காளர்களும்,  7 இதர பாலினத்தவர்களும், கும்பகோணம் சட்ட மன்ற தொகுதியில் 1.23.270 ஆண் வாக்காளர்களும்  1,26,576 பெண் வாக்காளர்களும்,  1 இதர பாலினத்தவரும், பாபநாசம் சட்ட மன்ற தொகுதியில் 1,19,815 ஆண் வாக்காளர்களும்,  1,22,406 பெண் வாக்காளர்களும்,  10 இதர பாலினத்தவர்களும், திருவையாறு சட்ட மன்ற தொகுதியில் 1,23,731 ஆண் வாக்காளர்களும், 1,28,014 பெண் வாக்காளர்களும்,  தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதியில் 1,30,424 ஆண் வாக்காளர்களும்,  1,39,672 பெண் வாக்காளர்களும்,  49 இதர பாலினத்தவர்களும், ஒரத்தநாடு சட்ட மன்ற தொகுதியில் 1,11,109 ஆண் வாக்காளர்களும்,  1,15,414 பெண் வாக்காளர்களும், 3 இதர பாலினத்தவர்களும், பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதியில் 1,09,721 ஆண் வாக்காளர்களும்,  1,18,146 பெண் வாக்காளர்களும்,  22 இதர பாலினத்தவர்களும், பேராவூரணி சட்ட மன்ற தொகுதியில் 1,02,708 ஆண் வாக்காளர்களும்,  1,05,185 பெண் வாக்காளர்களும்,  1 இதர பாலினத்தவரும், ஆக மொத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 9,39,707 ஆண் வாக்காளர்களும், 9,72,522 பெண் வாக்காளர்களும், 92 இதர பாலின வாக்காளர்கள் என 19,12,322 மொத்த வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த 10-01-2018 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 9,40,970. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 9,74,786,  இதர பாலினத்தவர் 92 ஆக கூடுதல் 19,15,848 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்,

11-01-2018 முதல் 31-08-2018 வரை தகுதி அடிப்படையில் ஆண் வாக்காளர்கள் 1888, பெண் வாக்காளர்கள் 2146, இதர பாலினத்தவர் 2 ஆக கூடுதல் 4,036 வாக்காளர்கள் புதிதாக இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

11-01-2018 முதல் 31-08-2018 வரை விசாரணை அடிப்படையில் இறந்த மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 3,151, பெண் வாக்காளர்கள் 4,410 3ம் பாலினத்தவர் 1 ஆக கூடுதல் 7,562 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்புக்கு பிறகு. தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 2,287 வாக்குச் சாவடிகள் உள்ளன.  அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officers
) நியமிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய முறையில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட அலுவலர்களாக (Designated Location Officers) மொத்தம் 1147 அலுவலர்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களின் பார்வைக்காக 01-09-2018 முதல் 31-10-2018 வரை வைக்கப்பட்டிருக்கும், இந்த நாட்களில் 01-01-2019 அன்று 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் (அதாவது வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிராத 01-01-2001க்கு முன்பு பிறந்தவர்கள் அனைவரும்) விண்ணப்பிக்கலாம்.

இவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் மேற்குறிப்பிட்ட காலத்தில் (01-09-2018 முதல் 31-10-2018 வரை) படிவம் எண் 6 ஐ பெற்று பூர்த்தி செய்து வயது மற்றும் குடியிருப்புக்கான ஆதார ஆவண நகல்களை இணைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமே அளித்திடலாம்.  01-01-2019 அன்று 18 வயது பூர்த்தியடையும் அனைவரும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் புதிதாக பெயர் சேர்க்க படிவம்  6 ஐயும் (வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் படிவம் 6A மூலம்), பெயர் நீக்கம் செய்திட படிவம் 7 ஐயும். பெயர், முகவரி இவற்றில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொண்டிட படிவம் 8 ஐயும். ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8A ஐயும் பூர்த்தி செய்து உரிய சான்றவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி அலுவலாpடமே அளிக்கலாம்,

01.09.2018 அன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம சபைகளிலும்.  உள்ளாட்சி அமைப்புகளிலும் வாக்காளர்களின் பார்வைக்காக 08-09-2018, 22-09-2018, 06-10-2018 மற்றும் 13-10-2018 ஆகிய நாட்கள் வைக்கப்பட்டிருக்கும்.

மேலும். வருகிற 09-09-2018, 23-09-2018, 07-10-2018 மற்றும் 14-10-2018 ஆகிய நான்கு நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. அந்நாட்களிலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  எனவே, மேற்குறிப்பிட்ட சிறப்பு முகாம் நாட்களை பயன்படுத்தி பொது மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தேவையான தேர்தல் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்.  தஞ்சாவூர் மாவட்ட வாக்காளர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் இடம் பெறதவர்கள் இடம் பெறவும். உரிய திருத்தம் மேற்கொண்டிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

01-09-2018 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு (Claims & objections) தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்களால் ( EROs ) தகுதி அடிப்படையில் ஒப்பளிப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டு. வருகிற 04-01-2019 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்,

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வாக்காளர்கள் தங்கள் பெயர் தவறு ஏதுமின்றி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்திடவும், தவறு ஏதுமிருப்பின் அவற்றை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தேவைப்படும்  சான்றவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கி நிவர்த்தி செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க. நீக்க. உரிய மாற்றங்கள் மேற்கொள்ள வாக்காளர்கள் நேரடியாக உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்க இயலாவிடில், www.elections.tn.gov.in என்ற இணைய தள முகவரி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.