அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் கரோனா சமூகப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரவிலும் கம்பரசர் டேங்கர் லாரி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றது வருகிறது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அறிவுறுத்தலின் பேரில், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி. பழனிவேலு தலைமையில், துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் மேற்பார்வையில், மீன் மார்க்கெட், வர்த்தகக் குடோன், வழிபாட்டுத்தலங்கள், வெளிமாநில தொழிலாளர்கள் குடியிருப்புகள், வெளிநாடுகளிருந்து வந்துள்ளவர்கள் தங்கிருக்கும் குடியிருப்புகள் உள்ளிட்ட அதிராம்பட்டினம் பேரூர் அனைத்து பகுதிகளில் கம்பரசர் டேங்கர் லாரி மூலம் கிருமி நாசினி கரைசல் கலந்த மருந்தினை தூய்மைப் பணியாளா்கள் தெளித்தனர்.
மேலும், அதிராம்பட்டினத்தில் உள்ள 11 அங்கன்வாடிகள், கூட்டுறவு வங்கி, மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் அனைத்துக் கடைகளிலும், 1 மீட்டா் இடைவெளியில் சமூக இடைவெளிக் கோடுகள் போடப்பட்டன. குடியிருப்புகள், வர்த்தகப் பகுதிகளில் குப்பைகள் அகற்றுதல், பிளிச்சிங் பவுடர் இடுதல், கைத்தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளித்தல், கழிவு நீர் வடிகால் தூய்மைப்படுத்தல் உள்ளிட்ட அன்றாட பொது சுகாதாரப்பணிகளை இரவு, பகல் பாராமல் மேற்கொண்டு வருகின்றனர்.
நீண்ட நாள் தீர்வு வரவேற்கத்தக்கது அல் ஹம்துலில்லாஹ் ! இதே போல் கொராணா அல்லாத மற்ற சாதாரண தினங்களிலும் இதே போல் செயல் முறை படுத்தினால் ஊருக்கு பயனுள்ளதாக இருக்கும் !
ReplyDelete