.

Pages

Thursday, April 2, 2020

கரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் நிதியுதவி அளிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்!

அதிரை நியூஸ்: ஏப்.02
தஞ்சாவூர் மாவட்டம், கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளும் மாவட்ட நிர்வாகத்திற்கு உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் நிதியுதவி அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ்  தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது :-
உலகளாவிய நோய்த்தொற்றாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுத்திடும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகளால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுத்திடும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகளில் தங்களின் பங்களிப்பு இருக்க வேண்டுமென்று விரும்பும் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம்.

"Account Name - DISTRICT COLLECTOR , THANJAVUR, Account Number - 378401000000444,  Branch - Indian Overseas Bank , District Collectorate - Thanjavur, IFSC - IOBA0003784, MICR  - 613020024" என்ற வங்கிக்கணக்கில் விருப்பமுள்ளவர்கள் நிதியுதவி செய்யலாம்.

வரைவோலை (Demand Draft) மற்றும் காசோலை (Cheque) ஆகியவற்றை தவிர்த்து, இணையதள பரிமாற்றம் (Online Transaction) மூலம் நிதி அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், கொரோனா நோய் முன்னெச்சரிக்கை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 9345336838 (வாட்ஸ் அப்), 04362 - 271695, 1077 (கட்டுப்பாட்டு அறை) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.