.

Pages

Sunday, April 19, 2020

அதிராம்பட்டினத்தில் ஆதரவற்ற முதியவருக்கு போலீசார் உணவு கொடுத்து உதவி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.19
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற மனநலம் பாதித்த முதியவருக்கு போலீசார் உணவு வழங்கி உதவினர்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், அதிராம்பட்டினம் பகுதியில் ரோந்து பணியில் இருந்த அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜார்ஜ் ராஜா, பேருந்து நிலையம் அருகே வந்தார். அப்போது, கிழக்கு கடற்கரைச்சாலை வழியாக நடந்து சென்ற சுமார் 75 வயதான மனநலம் பாதித்த ஆதரவற்ற முதியவரை அழைத்து விசாரித்தார். அப்போது, அவரால் பேச இயலாததால், தனக்கு பசிக்கிறது, சாப்பாடு வேண்டும், என்று சைகை மொழியில் உதவி ஆய்வாளர் ஜார்ஜ் ராஜாவிடம் கூறினார். முதியவர் சாப்பிடாமல் இருப்பதை அறிந்ததும், தான் சாப்பிட வைத்திருந்த உணவுப் பொட்டலங்களை எடுத்துவந்து முதியவருக்கு வழங்கி உதவினார். பின்னர், பசியுடன் இருந்த முதியவர் ஒரு உணவுப் பொட்டலத்தை பிரித்து அங்கேயே சாப்பிட்டார். மற்றொரு பொட்டலத்தை இரவு உணவுக்காக வைத்துக்கொண்டார்.
 

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.