அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற மனநலம் பாதித்த முதியவருக்கு போலீசார் உணவு வழங்கி உதவினர்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், அதிராம்பட்டினம் பகுதியில் ரோந்து பணியில் இருந்த அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜார்ஜ் ராஜா, பேருந்து நிலையம் அருகே வந்தார். அப்போது, கிழக்கு கடற்கரைச்சாலை வழியாக நடந்து சென்ற சுமார் 75 வயதான மனநலம் பாதித்த ஆதரவற்ற முதியவரை அழைத்து விசாரித்தார். அப்போது, அவரால் பேச இயலாததால், தனக்கு பசிக்கிறது, சாப்பாடு வேண்டும், என்று சைகை மொழியில் உதவி ஆய்வாளர் ஜார்ஜ் ராஜாவிடம் கூறினார். முதியவர் சாப்பிடாமல் இருப்பதை அறிந்ததும், தான் சாப்பிட வைத்திருந்த உணவுப் பொட்டலங்களை எடுத்துவந்து முதியவருக்கு வழங்கி உதவினார். பின்னர், பசியுடன் இருந்த முதியவர் ஒரு உணவுப் பொட்டலத்தை பிரித்து அங்கேயே சாப்பிட்டார். மற்றொரு பொட்டலத்தை இரவு உணவுக்காக வைத்துக்கொண்டார்.
I have very much appreciated dear George sir...
ReplyDelete