அதிரை நியூஸ்: ஏப்.01
தஞ்சாவூர் மாவட்டம், கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட விரும்பும் தன்னார்வலர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. பொதுமக்கள் வெளியில் வர முடியாத இந்நிலையில், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுதல், கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டிருக்கும் அரசு அலுவலர்களுக்கு உதவி செய்தல் ஆகியவற்றில் தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்தி கொண்டு வருகின்றனர்.
மேலும், விருப்பமுள்ள தன்னார்வலர்கள், தங்களின் விவரங்களை தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணையதளத்திலும், thanjavur.nic.in என்ற தஞ்சாவூர் மாவட்ட இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினால், தங்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யும் தன்னார்வலர்களுக்கு, தேவையின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டு, கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பணிகள் வழங்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட விரும்பும் தன்னார்வலர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. பொதுமக்கள் வெளியில் வர முடியாத இந்நிலையில், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுதல், கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டிருக்கும் அரசு அலுவலர்களுக்கு உதவி செய்தல் ஆகியவற்றில் தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்தி கொண்டு வருகின்றனர்.
மேலும், விருப்பமுள்ள தன்னார்வலர்கள், தங்களின் விவரங்களை தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணையதளத்திலும், thanjavur.nic.in என்ற தஞ்சாவூர் மாவட்ட இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினால், தங்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யும் தன்னார்வலர்களுக்கு, தேவையின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டு, கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பணிகள் வழங்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.